Followers

Thursday, February 12, 2015

யோக விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்றும் இன்றும் யோகம் சம்பந்தப்பட்ட பூஜையில் இருக்கிறேன்.  காலையிலேயே பூஜையை முடித்துவிட்டு உங்களுக்கு பதிவை தருகிறேன். மாலை ஆலங்குடி குரு கோவிலுக்கு செல்வதாக திட்டம் இருக்கிறது. 

புத ஆதித்யா யோகத்தைப்பற்றி பல நண்பர்கள் கேட்டனர். நெட்டில் தேடிப்பார்த்தாலே இந்த விபரம் உங்களுக்கு கிடைக்கும். படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் ஏட்டை கெடுத்தான் என்று சொல்லுவார்கள் அதுபோல் பல நண்பர்களுக்கு நல்ல சோதிடம் தெரிந்து இருந்தும் இப்படிப்பட்ட வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள்.

சோதிடம் ஆன்மீகம் இது எல்லாம் இருக்கட்டும் அதனை நம் வாழ்க்கைக்கு எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நமது வெற்றி இருக்கிறது. சோதிடத்தை படித்துவிட்டு பலனை சொல்வதில் வெற்றி கிடையாது. நமக்கு எப்படி அதனை பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதில் தான் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.

தொழில் அதிபர்களுக்கு தான் இவர் சொல்லுகிறார் என்று பல பேர்கள் சும்மா இருந்துவிட்டோம் என்று நான் போன் செய்த சில நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். தொழிலுக்கு நாம் செய்துக்கொடுத்துக்கொண்டிருப்பதால் அவர்களுக்கு முதலில் தெரிவிப்போம். அதனை பதிவில் நான் குறிப்பிட்டவுடன் நீங்களும் செய்துக்கொள்ளுங்கள்.

எனக்கு ஒரு சில நாட்களில் என்ன நட்சத்திரம் நடந்துக்கொண்டிருக்கிறது. என்ன திதி என்பதை கூட நான் மறந்துவிடுவது உண்டு. அம்மன் இருப்பதால் அதனை அவ்வப்பொழுது நினைவுப்படுத்தும். நான் அந்தளவுக்கு சோதிடத்திற்க்கு முக்கியம் கொடுப்பதில்லை அம்மனை வைத்து பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடுவது உண்டு.

நீங்கள் அப்படி இருக்ககூடாது அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். சமயம் வரும்பொழுது அதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: