Followers

Sunday, February 15, 2015

சிவபூஜை


வணக்கம் நண்பர்களே!
                      சிவராத்திரி வரும் நேரத்தில் இந்த பதிவை உங்களுக்கு அளிக்கிறேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் சிவபூஜை செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். பல பேர்கள் இதற்கு தயக்கம் காட்டினார்கள். ஒரு சில எனக்கு தெரிந்த நண்பர்கள் செய்கிறேன் என்று சொல்லி அதற்கு தயார் செய்தார்கள்.

சிவனை எப்படி வீட்டில் வைத்து வழிப்படுவது என்றும் ஒரு சிலர் என்னை கேட்டனர். சிவ லிங்கம் வாங்காமல் நடராஜரை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடலாம். பூஜை முடிந்து நடராஜரை நீங்கள் வீட்டில் உள்ள பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம்.

வீட்டில் செய்வதற்க்கு பயமாக இருக்கின்றது என்றால் நீங்கள் வெளிஇடங்களுக்கு செல்லும்பொழுது இந்த வழிப்பாட்டை நீங்கள் செய்யலாம். சிவனுக்குரிய சிவராத்திரி அன்றே இந்த பூஜையை நீங்கள் செய்ய தொடங்கலாம். 

வடமாநிலங்களில் நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கு நீங்கள் சிவலிங்கத்திற்க்கு பூஜை செய்யுங்கள். வடமாநிலங்களில் நீங்களே சிவலிங்கத்திற்க்கு அபிஷேகம் செய்யமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

'Sakthi' padhivu poduvadhaiye maranthu vitteerkala?