Followers

Monday, February 2, 2015

வாங்கி கட்டிய வரம்


வணக்கம் நண்பர்களே!
                      வாங்கி கட்டிய வரம் என்று ஒன்றைப்பற்றி பார்த்தோம். அதில் பணத்தைப்பற்றி பார்த்தோம். கடன் வாங்குவதால் ஏற்படும் சிக்கலைப்பற்றி பார்த்தோம். இப்பதிவில் ஒரு தகவலைப்பற்றி பார்க்கலாம்.

எப்படி எல்லாம் நாம் வாங்கிக்கட்டிக்கொள்கிறோம் என்பதை பற்றி தான் பார்த்து வருகிறோம். காமம் என்ற ஒன்று நல்ல வழியில் பயன்படுத்தினால் அது நல்ல வழிக்கு கொண்டு செல்லும் அதனை கொஞ்சம் தவறான வழியில் பயன்படுத்தும்பொழுது அதுவே பிரச்சினையாகவும் நமக்கு வந்துவிடும்.

இயற்கை ஒருவனுக்கு ஒருத்தி என்ற மாதிரி தான் இயங்குகிறது. அதுவே ஒருத்திக்கு மேல் போனால் வியாதி வரும் என்பதை இயற்கையே உணர்த்தும்பொழுது ஒருத்தனுக்கு ஒருத்தியோடு இருப்பது நல்லது. 

காமத்தால் எப்படி சூட்சமசரீரம் பாதிப்படைகிறது என்றால் ஒருவரிடம் இருந்து மகிழ்ச்சியை நாம் பெறும்பொழுது அவர்களின் தோஷத்தை அதாவது அவர்களின் கஷ்டத்தையும் நாம் பெற்றுக்கொள்ளதான் வேண்டும்.

ஒவ்வொருக்கும் ஜாதகத்தில் தோஷம் இருக்கும் அவர்களோடு நாம் கலக்கும்பொழுது அவர்களின் தோஷமும் நமக்கு வரும். திருமணத்திற்க்கு பிறகு ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றம் என்பது வரும் அது ஆணும் பெண்ணும் ஜாதகமும் இணைந்து செயல்படும். 

கண்ட கண்ட பெண்களை நாம் பார்த்துக்கொண்டே இருந்தால் அவர்களிடம் உள்ள கெட்ட விசயங்கள் உங்களை பிரச்சினையில் தாழ்த்திவிடும். இப்படி இருப்பவர்களுக்கும் நாம் செய்வது கடினமாகதான் இருக்கும்.

இதுவரை தவறு செய்துவந்தாலும் பரவாயில்லை என்று விட்டு விட்டு இனிமேல் தவறை செய்யவேண்டாம் என்று மனம் திருந்தி நல்ல வழியில் செல்லுங்கள். இறையருள் உங்களை மேலே தூக்கிவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: