Followers

Monday, February 9, 2015

யோகம் வந்த நேரம்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று ஒரு வேலையில் இருந்தபொழுது திடீர் என்று ஒரு சிந்தனையை அம்மன் எனக்கு கொடுத்தது. அதுவரை நான் அதனைப்பற்றி சிந்திக்கவில்லை அம்மன் நினைவுப்படுத்தியதால் அதனை நான் புரிந்துக்கொண்டேன். முதலில் எதனை செய்வதாக இருந்தாலும் எனது தொழில் நண்பர்களுக்கு தெரியப்படுத்திவிடுவேன். நேற்று ஞாயிறுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு எனக்கு தெரிந்த காரணத்தால் அந்த நேரத்தில் ஒவ்வொருவராக போனில் தொடர்புக்கொண்டேன். முக்கால்வாசி நம்பர் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அந்த நாள் இந்த உலக வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்ட நாளாகவே மக்கள் கருதுகின்றனர். ஒருவன் உருப்படவேண்டும் என்றால் ஞாயிற்றுகிழமை அதிகாலையில் எழுந்துவிடவேண்டும். நான் தொடர்புக்கொண்டப்பொழுது இரண்டு நண்பர்கள் மட்டும் செய்வதற்க்கு தயாராக இருந்தனர். அவர்களின் வழியாக அம்மனை வைத்து செய்யவேண்டும். அடுத்த அரைமணி நேரத்தில் அவர்களுக்கான வேலையை முடித்தேன்.

ஒவ்வொரு மனிதனும் யோகம் வேண்டும் என்று அலைகிறான். ஒரு யோகம் அமைந்துவிட்டால் அதுபோதும் அதுவே நம்மை எங்கோ கொண்டு சென்றுவிடும் என்று சோதிடம் படித்த அனைவருக்கும் தெரியும். ஒரு சிலருக்கு யோகஜாதகமாக அமைந்தாலும் அவர்களுக்கு யோகம் வேலை செய்வதில்லை.

யோகமே இல்லாதவர்களுக்கு யோகத்தை பெறுவதற்க்கான முயற்சி தான் நேற்று நான் செய்த வேலை. இப்பொழுது மகரத்தில் சூரியன் புதன் சேர்க்கை நடைபெற்று புதஆதித்யா யோகத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது. இது அடிக்கடி நடைபெறுகின்ற ஒரு நிலை தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு யோகத்தை குரு பார்ப்பது தான் மிக விஷேசம். குருவும் உச்சவீட்டில் இருந்து பார்ப்பது கிடைக்காத ஒரு அற்புதம் என்றே சொல்லலாம்.

மகரத்தில் ஒரு கிரகம் அமைந்தால் அப்பொழுது அந்த கிரகத்திற்க்கு நாம் பரிகாரம் செய்தால் வாழ்நாள் முழுவதும் நமக்கு நல்ல பலனை கொடுக்கும் என்று எனது குரு சொல்லிக்கொடுத்து இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பது சூரியனுக்கு மிக விஷேசமான ஒரு நாள் என்பதால் நேற்றே அதனை செய்யவேண்டும். நல்லபடியாக இரண்டு நபர்களுக்கு நான் நேற்று செய்துக்கொடுத்தேன்.

மறுபடியும் இந்த மாதிரியான கிரக நிலை வருவதற்க்கு பல வருடங்கள் ஆகலாம். யாருக்கு கிடைக்கவேண்டுமோ அவர்களுக்கு கிடைத்து இருக்கும்.தை மாதம் முடியும் நிலையில் இருக்கிறது. அடுத்த ஞாயிற்றுகிழமை அந்த வாய்ப்பு இருக்காது என்பதால் அம்மன் நேற்று எனக்கு இந்த தகவலை சிந்திக்க வாய்ப்பை கொடுத்தது.

சூரியன் புதன் மற்றும் குரு கிரகம் இந்த மூன்று கிரகத்தையும் வைத்து பரிகாரம் செய்யப்படவேண்டும். மிக அதிகமான நல்ல பலனை நாம் இந்த யோகத்தால் பெறமுடியும். யோகம் இல்லாதவர்களும் இந்த யோகத்தை பெறமுடியும்.

இப்பொழுது இரண்டு நாள் கிடைத்து இருக்கிறது. புதன் வியாழன் இதனை வைத்தும் நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். உங்களுக்கு தெரிந்த வழிபாட்டை வைத்து இந்த யோகத்தை பெற்றுக்கொள்ளுங்கள். மறுபடியும் இப்படிப்பட்ட கிரக நிலைகள் உடனே அமையுமா என்பதை பரிசோதனை செய்து பாருங்கள்.

எப்படி வழிப்பாட்டை செய்வது என்பதை உடனே எனக்கு போன் செய்து கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். அம்மனை வைத்து இதனை உங்களுக்கு செய்யவதற்க்கு எனது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு எனக்கு போன் செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: