Followers

Monday, February 2, 2015

கோவில் தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                      இன்று காலை பதிவை எழுதிவிட்டு நேராக மன்னார்குடி இராஜாகோபால சுவாமி கோவிலுக்கு சென்று வந்தேன். மன்னார்குடியில் நான் படிக்கும் காலத்தில் அடிக்கடி இந்த கோவிலுக்கு சென்று வந்து இருக்கிறேன். அதன் பிறகு நீண்ட நாள்களுக்கு பிறகு இப்பொழுது தான் சென்று வந்தேன். மன்னார்குடி பெரிய கோவில் என்றால் அனைவருக்கும் தெரியும்.

பெருமாள் இராஜாகோபாலனாகவும் தாயார் செங்கலமதாயார் என்பதாகவும் அழைக்கின்றார்கள். இந்த பகுதிக்கு சென்றால் இந்த கோவிலை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.  தஞ்சாவூர் பகுதியில் உள்ள கோவில்கள் அனைத்தையும் நீங்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். 

திருவெண்காடு புதன் ஸ்தலம் கண்டிப்பாக சோதிடராக மற்றும் ஆன்மீகவாதியாக இருப்பவர்கள் சென்று வரவேண்டும். அதேப்போல் திருநாகேஸ்வரமும் நீங்கள் பார்க்கவேண்டிய ஸ்தலம்.

பல கோவில்களை நான் தரிசனம் செய்து இருக்கிறேன். அனைத்தையும் மறுமுறை இப்பொழுது தரிசனம் செய்து வருகிறேன்.ஒவ்வொரு கோவிலையும் படம் எடுத்து பதிவில் போடமுடியாது. அதனை நீங்கள் நேரில் சென்று தரிசனம் செய்யும்பொழுது அதன் அற்புதத்தை காணமுடியும்.

பெளர்ணமி அன்று ஏதாவது ஒரு சிவாலயத்திற்க்கு அல்லது ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வாருங்கள். பெளர்ணமி வழிபாடு மிகவும் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: