வணக்கம்!
கிரக பாதிப்பைப்பற்றி சொன்னேன். அதில் பரிகாரத்தையும் சொல்லிவந்தேன். அந்த வரிசையில் மேலும் ஒரு பரிகாரத்தைப்பற்றி பார்க்கலாம்.
உங்களின் ஜாதகம் முழுவதும் அடிப்பட்டுவிட்டால் அதற்கு நீங்கள் செய்யவேண்டியது பல சாமியார்களின் ஆசி பெறவேண்டும். அவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கவேண்டும். பல சாமியார்களின் ஆசி உங்களின் ஜாதகத்தில் உள்ள மோசமான கெடுதல்களை எல்லாம் விடுவித்து ஒரு வழியை ஏற்படுத்திக்கொடுக்கும்.
என்னுடைய ஜாதகம் மிகப்பெரிய மோசமான விளைவுகளை எனக்கு ஏற்படுத்தியது என்பதை உங்களிடம் சொல்லியுள்ளேன். அதனை நிவர்த்தி செய்தது எல்லாம் இப்படிப்பட்ட வழிகளை தான் நான் கடைபிடித்தேன்.
நல்ல சக்தி உள்ளவர்களோடு தொடர்பு ஏற்படும்பொழுது நமக்கு ஏற்பட்ட எப்பேர்பட்ட தோஷமும் விலகும். நமக்கு ஒரு நல்ல வழியை அவர்கள் வழியாக நமக்கு ஏற்படும்.இதனை நீங்கள் செய்துபாருங்கள்.
சென்னையில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். ஒரு சில தினங்களில் உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Kovil poosaarikalidam aasi vaangalama?oruvar sakthi ullavar enru eppadi arivadhu?
Post a Comment