Followers

Wednesday, March 18, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
          நேற்று காலை சென்னையில் இருந்து தஞ்சாவூர் வந்துவிட்டேன். நேற்று காலையில் ஊருக்கு வந்தவுடன் திருச்சியில் இருந்து ஒரு நண்பர் என்னை அழைக்க வந்துவிட்டார். அவரோடு திருச்சிக்கு சென்று இரவு தான் திருப்பினேன். தொடர் வேலை காரணமாக உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை.  நாளை மதியம் கோயம்புத்தூர் பயணம்.

பதிவு
     சென்னை நண்பர்களை சந்திக்கும்பொழுது ஒரு சில விசயங்கள் தெரிந்தன. அதாவது எல்லாேரும் ஏதாவது ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அதில் இருந்து வெளிவருவதற்க்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். அனைத்து பிரச்சினைக்கும் அடிப்படை பணம்.

அடையாரில் ஒரு இனிப்பு கடை உள்ளது. பல ஊர்களில் அதற்கு கிளைகள் உள்ளன. அந்த கடை உரிமையாளர் வீட்டில் பார்த்தால் மாதந்தோறும் அடிக்கடி பூஜை நடந்துக்கொண்டிருக்கும். அவர்க்கு தான் பணம் நிறைய இருக்கிறதே அப்புறம் எதற்கு அவர் பூஜை செய்யவேண்டும் என்று நான் நண்பர்களோடு பேசிக்கொண்டு இருப்பேன்.

பணத்தை தக்க வைத்துக்கொள்வதற்க்கும் அந்த பணமும் மேலும் மேலும் பெருகுவதற்க்கும் அவர் பூஜை செய்துக்கொண்டே இருக்கிறார். அவருக்கு பணம் பெருகிக்கொண்டே இருக்கிறது. பல மார்வாடி இதனை செய்கின்றனர்.

நம் ஆட்கள் பணத்தையும் பெருக்குவதில்லை பணத்தை சம்பாதிப்பதும் இல்லை. பணத்தை இவர்கள் சம்பாதிப்பதே டாஸ்மாக்கில் குடிப்பதற்க்கு மட்டுமே பயன்படுத்துக்கின்றனர். நம்ம ஆட்கள் அதில் ஏதாே ஒன்றை கண்டுள்ளனர். சொர்க்கம் மதுவில் தான் இருக்கிறது பணத்தில் இல்லை என்று நினைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

என்னிடம் இருக்கும் தொழில் அதிபர்களாக இருக்கட்டும் தனிநபர்களாக இருக்கட்டும் தமிழர்களின் எண்ணிக்கை மிக குறைவு. நான் எல்லோருக்கும் செய்து தரவேண்டும் என்று தான் நினைப்பேன் ஆனால் நம்ம ஆட்கள் வருவதில்லை நான் என்ன செய்வது? 

ஒரு பூஜை செய்ய நான் போனால் தமிழ் வம்சத்தில் வராத குடும்பங்களாக இருந்தால் அள்ளிக்கொடுப்பார்கள். தமிழ் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சென்றால் ஆயிரம் தருவது மிக மிக கடினம். எனக்கு பணம் தருகிறார்கள் என்பதற்க்காக நான் சொல்லவில்லை. நம்ம ஆட்களிடம் பணம் இல்லை. ஏன் இந்த நிலைமை ?

நமக்கு பணம் வரும் வழியை யாரும் சொல்லிதருவதில்லை அப்படியே சொன்னாலும் அதனை நாம் செய்ய நினைப்பதில்லை. சோம்பேறிதனம் என்று சொல்லலாம்.

நமது அம்மன் பூஜைக்கு ஒரு சில குடும்பங்கள் தொடர்ச்சியாக பங்களித்து வருகின்றனர். அவர்கள் இன்று நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளனர். இதனை ஏன் இந்த இடத்தில் சொல்லுகிறேன் என்றால் கடவுள் வழிபாடாக இருக்கட்டும் எந்த விசயமாக இருந்தாலும் தொடர்ச்சியாக நடைபெறும்பொழுது அவர்களின் வாழ்க்கை மிகப்பெரிய வளர்ச்சியை காண்கிறது.

ஏதாவது ஒரு வழிப்பாட்டை நீங்கள் தொடர்ச்சியாக பின்பற்றி வாருங்கள். நாள் ஒன்றுக்கு ஒரு முறையாவது அந்த வழிப்பாட்டை செய்து வரும்பொழுது உங்களுக்கு மிகப்பெரிய சிக்கல் எல்லாம் வாழ்வில் ஏற்படாது. அதிக நேரம் கடவுளுக்கு ஒதுக்கும்பொழுது வாழ்வில் வசந்தம் தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கும்.

பிரச்சினை உடனே தீரவேண்டும் என்றால் நீங்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு பூஜை அல்லது வழிபாட்டை தொடர்ந்து செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு