Followers

Monday, March 2, 2015

கிரக பாதிப்பு பரிகாரம்


வணக்கம்!
          கிரகப்பாதிப்பு பரிகாரத்தைப்பற்றி பார்த்து வருகிறோம். இந்த பரிகாரம் ஒரு வழி தானே தவிர நிரந்தர தீர்வாக அமைந்துவிடாது என்பதையும் இந்த பதிவில் சொல்லிவிடுகிறேன்.

நமக்கு சாவு வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். நாம் அதற்கு பரிகாரமாக சுடுகாட்டில் சென்று படுத்துக்கொண்டால் நம்மை சாவு நெருங்காது என்று நினைக்ககூடாது வரவேண்டிய சாவு வரத்தான் செய்யும். இந்த வழிமுறைகளை செய்தும் நாம் நமது பிரச்சினை குறைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக இந்த பரிகாரத்தை சொல்லுகிறேன்.

ஆறாம் வீட்டு அதிபதி தசா நடந்தால் ஒருவருக்கு கடன் தொல்லை ஏற்பட வழி இருக்கிறது. கடன் இல்லை என்றால் அவர்க்கு நோயாவது வந்து தொல்லைப்படுத்தும். கடன் இருந்தாலும் பரவாயில்லை நோய் வந்துவிட்டால் பெரிய பிரச்சினையாகிவிடும். 

ஆறாவது தசா மட்டும் கடனை கொடுப்பதில்லை வேறு சில கெட்ட கிரகங்கள் கூட கடனை கொடுக்கும். இந்த காலத்தில் ஒருத்தர் ஏழ்மையாக இருந்தால் அவர் கடனாளியாக தான் இருப்பார். கடன் இல்லாமல் இருந்தால் ஏதாவது கொஞ்சமாவது கடன் வாங்குங்கள் இது ஒரு பரிகாரம்.

கடன் வாங்குவது உங்களை பெரிய பிரச்சினையில் இருந்து தப்பிக்க வைக்கும். கடனை வட்டி கடனாக வாங்கி மாட்டிக்கொள்ளாதீர்கள். கொஞ்சம் வாங்கி திருப்பி தருகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நன்றாக வந்தவுடன் திருப்பிக்கொடுத்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: