Followers

Friday, March 20, 2015

கிரக பாதிப்பு பரிகாரம்


வணக்கம் !
          கிரகபாதிப்பிற்க்கு நாம் எளிமையான பரிகாரத்தைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் மேலும் ஒரு தகவலைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

நமக்கு கிரக நிலைகள் பாதிப்பை ஏற்படுத்தினால் முதலில் நாம் சம்பந்தமே இல்லாமல் அடுத்தவர்களிடம் வாயை விட்டு மாட்டிக்கொள்வோம். அதாவது சம்பந்தமே இல்லாமல் அடுத்தவர்களைப்பற்றி பேசி நாம் மாட்டிக்கொள்வது. இந்த அனுபவமும் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும்.

பொதுவாகவே நாம் சம்பந்தம் இல்லாமல் அடுத்தவர்களின் விசயத்தில் தலையீடு செய்யகூடாது.தலையீடு செய்தோம் என்றால் அவர்க்கு நாம் உதவி செய்யும் நிலையில் இருந்தால் செய்யலாம். நம்மால் அடுத்தவர்களுக்கு எந்த விதத்திலும் உதவி செய்யமுடியவில்லை என்றால் ஒதுங்கி இருப்பது நல்லது.

நம்மை நாம் ஒழுங்குப்படுத்திக்கொள்வதற்க்கே நேரம் இருக்காது. இதில் அடுத்தவர்களுக்கு ஏன் நாம் ஏதாவது செய்கிறோம் என்று மாட்டிக்கொள்ளவேண்டும். சம்பந்தமே இல்லாமல் பேசாமல் இருப்பது மிகச்சிறந்த பரிகாரமாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Ithu sirandha parigaram.naan ithil nalla palan kandukondirukkiren