Followers

Thursday, March 26, 2015

கிரக பாதிப்பு பரிகாரம்

வணக்கம் !
          நாம் பல நேரத்தில் செவிடாக இருப்பது நல்லது. ஏன் என்றால் நாம் பெரிய வீரன் என்று நம்மை நாம் அறியாமல் ஏதாவது வம்பு இழுத்துக்கொண்டு அதுவே பிரச்சினையாக மாறிவிடுவதும் உண்டு. 

மூன்றாவது வீட்டில் உள்ள கிரகங்கள் அதிக பலம் பெற்றால் நன்மை என்று சோதிடத்தில் சொல்லுவார்கள். அப்படி வலு பெறும்பொழுது அவன் சும்மா இருக்கமாட்டான் பக்கத்தில் நடக்கும் சண்டையை என்னுடைய சண்டை என்று இழுத்துக்கொண்டு வம்பு இழுத்துக்கொண்டு நிற்பான்.

இன்றைய காலத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு இருப்பவர்களை கூட இந்த உலகம் விடுவதில்லை. சீண்டி பார்த்து சிரழித்துவிடும். நமது ஜாதகத்தில் காதிற்க்கு மூன்றாவது வீட்டை தான் சொல்லுவார்கள். அந்த மூன்றாவது வீடு கெட்டால் காது கெட்டுவிடும் என்பார்கள். உண்மையில் இந்த வீடு கெட்டு காது கெட்டாலும் பரவாயில்லை. தேவையில்லாத விசயங்களை காதில் போட்டு அதனால் சண்டை வருவதைவிட காது கேட்காமல் இருப்பது நல்லது.

நமக்கு ஏற்படும் சூழ்நிலை கூட நமக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடும். வம்பு கூட தானாகவே வந்துவிடுவதும் உண்டு. இதற்கு எல்லாம் என்ன பரிகாரம் என்றால் காது செவிடாக இல்லாவிட்டாலும் காதிற்க்கு வரும் செய்தியை உள்வாங்கிக்கொள்ளாதீர்கள்.

இன்று இரவு வெளியூர் பயணம். நாளை அந்த ஊரில் இருக்கும் நண்பர்களை போனில் தொடர்புக்கொண்டு சந்திக்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: