Followers

Tuesday, March 3, 2015

கடன் ஏன் ஏற்படுகிறது?


வணக்கம் !
          கடன் வாங்கியவர்கள் சொல்லும் வார்த்தை இந்தியாவே கடனில் இருக்கிறது நான் வாங்கினால் என்ன என்று சொல்லுவார்கள். மனிதனுக்கு கடன் ஏற்படுவது சோதிடத்தில் ஆறாவது வீட்டு அதிபதியாக இருந்தாலும் பொதுவாக சோதிடத்தில் ஒரு கிரகம் இருக்கிறது. அந்த கிரகம் எப்பொழுது எல்லாம் வழு இழக்கிறதோ அப்பொழுது எல்லாம் உங்களுக்கு கடன் ஏற்பட்டுவிடும்.

செவ்வாய் கிரகம் தான் அந்த கிரகம். செவ்வாய் கிரகம் உங்களுக்கு நன்றாக இருந்தால் உங்களுக்கு கடன் என்பது ஏற்படாது. செவ்வாய் கிரகம் வலு இழந்தால் அல்லது ஏதாவது சிக்கலில் மாட்டினால் உங்களுக்கு கடன் ஏற்பட்டுவிடும்.

செவ்வாய் கிரகம் வலுவாக அமைந்த ஜாதகர்கள் கடன் பிறருக்கு கொடுப்பார்கள். அதாவது வட்டித்தொழில் செய்பவர்களாக பெரும்பாலும் இருப்பார்கள்.

உங்களுக்கு கடன் தொல்லை இருந்தால் உங்களின் ஜாதகத்தை எடுத்து செவ்வாய் கிரகத்தின் நிலையை அறிந்து பாருங்கள். செவ்வாய்கிரகத்திற்க்கு தேவையான பரிகாரங்கள் செய்து வாருங்கள். உங்களுக்கு கடன் தொல்லை இருக்காது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: