Followers

Tuesday, March 3, 2015

குரு சந்திர யோகம்


வணக்கம்!
         ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்வுகள் சோதிடத்தில் நடந்துக்கொண்டு இருக்கின்றன. அதில் ஒரு சில நிகழ்வுகள் நமக்கு நல்ல நிகழ்வுகளாக அமைகின்றன. நேற்று முதல் நாள் இரவு எட்டு மணியில் இருந்து இன்று வரை குருவும் சந்திரனும் இணைந்து இருக்கின்றன.

குருவும் சந்திரனும் இணைந்து இருந்தால் அந்த காலத்தில் நமக்கு நல்ல பணவரவு வரும் என்பது எல்லாேருக்கும் தெரிந்த ஒன்று. ஜாதகத்தில் ஒரு சிலருக்கு குருவும் சந்திரனும் இணைந்து இருக்கும் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பணவரவு இருந்துக்கொண்டே இருக்கும்.

குருசந்திர யோகம் இல்லாதவர்கள் இப்படிப்பட்ட நிலையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த முறை நீங்கள் சிவன் கோவிலுக்கு செய்யவேண்டும்.

இன்று பிரதோஷகாலம் வருகிறது. பிரதோஷத்திற்க்கு தேவையான அபிஷேகப்பொருட்களை வாங்கி கொடுங்கள். சிவன் கோவிலில் நடக்கும் அபிஷேகத்திலும் கலந்துக்கொண்டு மனமுருக பிராத்தனை செய்துக்கொண்டு வாருங்கள். 

தொழில் நண்பர்களுக்கு நேற்றே நான் செய்துவிட்டேன். இன்று உங்களுக்கான நேரம். கடைசி நேரத்தில் ஏன் சொல்லுகிறேன் என்றால் அதிர்ஷ்டவாய்ப்பு என்பது எல்லாேருக்கும் கிடைக்காது. கிடைக்கவேண்டிய நபருக்கு மட்டும் கிடைக்கும். இன்று செய்யமுடியாதவர்கள் அடுத்த மாதம் பார்த்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: