Followers

Thursday, April 30, 2015

உச்சம்


வணக்கம்!
        உச்ச கிரகத்தைப்பற்றி நாம் பார்த்து வந்தோம். அதில் ஒரு கருத்தை இப்பதிவில் பார்க்கலாம். ஒருவருக்கு ஒரு கிரகம் உச்சம் பெற்றாலே போதும் அவர் நல்ல முறையில் வாழ்க்கையை ஓட்டிவிடுவார் என்று சொல்லுவோம்.

ஒரு கிரகம் உச்சம் பெறும்பொழுது அந்த கிரகத்தை வேறு தீய கிரகங்கள் பார்வையை செலுத்தாமல் இருந்தால் உச்சம்பெற்ற கிரகம் நல்ல பலனை கொடுக்கும். உச்சம் பெற்ற கிரகத்தை தீய கிரகங்கள் பார்த்தால் நல்ல நிலைக்கு உயர்த்தி அதில் சிக்கலை உருவாக்கி விடும். 

பல பேர்களின் வாழ்க்கையை நீங்களே பார்த்து இருக்கலாம். இவர்கள் எல்லாம் எப்படி இந்த நிலைக்கு வந்தார்கள் என்று உங்களுக்கு தோன்றும். அப்படிப்பட்டவர்கள் ஒரு சில நாட்களிலேயே அதில் நிறைய பிரச்சினை சந்திப்பார்கள். உச்சம்பெற்ற கிரகம் கொடுத்த வாழ்க்கை அதில் சிக்கலை ஏற்படுத்தியது தீயகிரகங்களின் பார்வையால் வந்த பிரச்சினை.

ஒரு சில கிரகங்கள் உச்சம் பெற்று இருக்கும். அந்த உச்சம்பெற்ற கிரகம் தன்னுடைய தசா காலத்தில் அல்லது புத்தி காலத்தில் கூட நல்லது செய்வது கிடையாது. அதற்கும் இது மாதிரியான தீயகிரகங்களின் பார்வை தான் காரணமாக இருக்கமுடியும்.

உங்களுக்கு இப்படிப்பட்ட நிலையில் கிரகங்கள் இருந்தால் நீங்கள் நல்ல பரிகாரத்தை செய்துக்கொள்வது நல்லது. எப்படி வேலை செய்யவேண்டும் என்று பரிகாரம் செய்யும் நபருக்கு தெரியும் அவரிடம் சென்று இதனை சொல்லி செய்துக்கொள்வது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் அருள்


வணக்கம்!
          நான் பணத்திற்க்கு கஷ்டப்பட்ட நாட்களில் கூட அவ்வளவு எளிதில் இறங்கியது கிடையாது. அதனை செய்து தருகிறேன் என்று பணம் கேட்டது கிடையாது. என்னை தேடி வரும் நண்பர்களிடம் அதனை செய்து தருகிறேன் இதனை செய்து தருகிறேன் என்று பணம் கேட்டது கிடையாது. 

நம்முடைய கஷ்டத்தை போக்க அம்மன் ஏதாவது ஒரு வழியை செய்துக்கொடுத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. அம்மனும் நிறைவேற்றி வந்தது.

தொழில் செய்பவர்களிடம் கூட நான் பணம் கேட்டது கிடையாது. நடந்த முடிந்த பிறகு பணத்தை கொடுத்தால் போதும் என்று சொல்லிவிடுவேன். இதில் எல்லாம் சரியாக இருந்து வந்ததால் ஒரளவு நிம்மதியாக பாேய்க்கொண்டு இருந்தது.

இப்பொழுது எல்லாம் என்னிடம் வரும் நண்பர்கள் அவர்களே புரிந்துக்கொண்டு பூஜை செய்வற்க்கும் எனக்கும் பணத்தை கொடுத்துவிடுகிறார்கள். சிறிய தொழிலாக இருந்தால் பரவாயில்லை இப்பொழுது எடுக்கும் தொழில் எல்லாம் மிகப்பெரிய தொழிலாக இருக்கின்றது.

பெரிய தொழில் என்று வந்தவுடன் அதற்கு செய்யும் பூஜையின் அளவும் பெரிதாக இருக்கின்றது. அதற்கு செலவு செய்தால் தான் தொழில் மேம்படுத்தமுடியும். அம்மன் அருள் பெரிய அளவில் உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு தயாராக வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வியாதியும் வாழ்வும்


வணக்கம்!
          நேற்று தஞ்சாவூர் பெரிய கோவில் தேர் இழுக்க சென்று இருந்தேன். தொடர் பயணம் செல்வதால் உங்களுக்கு அதிக பதிவை தரமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. விரைவில் அதற்கு ஒரு தீர்வை காணவேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். 

இன்றைய காலத்தில் முப்பத்தைந்து வயதை கடந்துவிட்டால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வியாதி வந்துவிடுகிறது. அதிலும் கேன்சர் வியாதி வந்து படுத்தும் பாடு கஷ்டமாக இருக்கின்றது. ஒவ்வொரு வியாதிக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லுகிறார்கள். அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லுகிறார்கள்.

இயற்கை காய்கறிகளை சாப்பிடுங்கள் என்று சொல்லுகிறார்கள். இயற்கை காய்கறிகளை சாப்பிடும் நபர்களுக்கும் வியாதி வந்துக்கொண்டு தான் இருக்கின்றது.உண்மையில் இயற்கை காய்கறிகள் விலையும் தன்மையில் உள்ள உண்மை தன்மை என்பதே தனிக்கதையே எளிதலாம். 

எங்கள் பகுதியில் நிறைய இயற்கை காய்கறிகள் விளைவிக்கிறார்கள் ஆனால் அதற்கும் உரம் போட்டு தான் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனை இயற்கை காய்கறி என்று சொல்லிக்கொண்டு விற்கிறார்கள்.

வியாதி வராமல் இருக்க ஒன்றை மட்டும் என்னால் சொல்லமுடியும். இதனை செய்வதற்க்கு கடினமாக இருக்கலாம் நான் சோதனை செய்தவரை இதனை செய்கின்றவர்களுக்கு எந்த வியாதியும் வரவில்லை என்பது மட்டும் தெரிகிறது.

நான் கண்ட நோய் வராமல் இருக்க செய்யும் ஒரு செயல்

ஒரு மனிதன் விடியற்காலை நான்கு மணிக்குள் எழுந்துவிட்டால் அவனுக்கு எந்த நோயும் வருவதில்லை. நிறைய பேர்களிடம் நான் நேரடியாக பார்த்த மற்றும் கேட்ட விசயம் இது. இதனை செய்வது கடினம் செய்துவிட்டால் அற்புத பலனை அனுபவிக்கலாம்.

நண்பர்களே கோயம்புத்தூர் நாளை மாலை புறப்படுகிறேன். இரண்டு நாட்கள் அங்கு தங்குவதாக திட்டம் இருக்கின்றது. நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் உங்களை சந்திக்கிறேன். கடைசி முறை செல்லும்பொழுது சந்திக்காத நண்பர்களையும் இந்த முறை சந்தித்துவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 29, 2015

ஆலய தரிசனம்


வணக்கம்!
          நேற்று மதியம் நண்பர் ஒருவர் அவரின் பங்களிப்பை அளித்து இருந்தார். ஒரு வேலை காரணமாக பணம் அனுப்பியவுடன் இன்று செவ்வாய்கிழமை எப்படியும் சுவாமிமலை சென்று அவரின் பங்கை செலுத்தவேண்டும் என்று அடித்து பிடித்து சென்றேன்.

நான் கோவிலுக்கு செல்லும்பொழுது மாலை நேரமாகிவிட்டது. நான் கோவிலுக்குள் செல்லும்பொழுது அபிஷேகம் ஆரம்பித்தார்கள். பொதுவாக நான் கோவிலுக்கு சென்றால் அங்கு அந்த நேரம் பார்த்து ஏதாவது ஒரு விஷேசம் நடைபெறும். நான் சக்தியை பிறர்க்கு கொடுத்தவர்களுக்கு கூட அப்படி நடைபெறுவதை கண்டு என்னிடம் சொல்லியுள்ளார்கள்.

நாம் ஏதோ புண்ணியம் செய்து இருக்கிறோம். நமக்கு இப்படி ஒரு வாய்ப்பை இறைவன் கொடுத்து இருக்கிறார் என்று இறைவனுக்கு நன்றியை செலுத்துவேன்.

நாம் எங்கு சென்றாலும் அந்த பகுதியில் இருக்கும் நண்பர்களை தொடர்புக்கொண்ட பிறகு செல்லுவேன். சென்னையில் இருந்து நண்பர் ராஜ்குமார் கும்பகோணம் பகுதியில் உள்ள கோவிலைகளை தரிசனம் செய்ய வந்திருந்த தகவல் எனக்கு தெரிந்தவுடன் அவருக்கு போன் செய்து வந்துவிடுங்கள் என்றேன் அவரும் வந்துவிட்டார். அவரோடு தான் சுவாமி மலை தரிசனம் செய்தேன்.

இந்த பதிவை ஏன் உங்களுக்கு தருகிறேன் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. சுவாமி மலை முருகன் மிக சக்தி வாய்ந்த ஒருவர் நாம் என்ன வேண்டி சென்றாலும் நமக்கு கொடுக்க கூடியவர். கும்பகோணம் நீங்கள் செல்லும்பொழுது ஒரு முறை சென்று வேண்டிவிட்டு வாருங்கள் உடனே உங்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 28, 2015

கல்வி தானம்


வணக்கம்!
          அந்தந்த நேரத்தில் உதவி செய்யவே நமக்கு கடவுள் பல சந்தர்ப்பத்தை வைத்திருப்பார். அந்த நேரத்தை நாம் சரியாகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தற்பொழுது பள்ளிக்கு விடுமுறை காலம் இருக்கின்றது. அடுத்த வருட கல்விக்காக ரிசல்ட்டை எதிர்நோக்கி இருப்பார்கள். இதில் ஏழை குழந்தைகளாக இருந்தால் ரிசல்ட்டை எதிர்நோக்கத்தோடு படிப்பு செலவுக்கு என்ன செய்வது என்று பல குழப்பத்தில் இருப்பார்கள்.

நாம் படிக்காத படிப்பை இப்படிப்பட்ட குழந்தைகளாவது படிக்கவேண்டும் என்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள். நம்மிடம் அந்தளவுக்கு பணம் இல்லை என்று நினைக்காமல் இருக்கின்ற பணத்தை மனநிறைவோடு அவர்களிடம் கொடுக்கும்பொழுது அவர்களின் கல்விக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்து இருக்கிறோம் என்ற மனதிருப்தி ஏற்படும்.

நல்ல பணவசதி இருந்தால் முழு செலவையும் ஒருவருக்காவது ஏற்றுக்கொள்ளுங்கள். தற்பொழுதே அதற்கு தயார் செய்துவிட்டால் அவர்களின் கல்வி ஆரம்பிக்கும்பொழுதே நாம் உதவி செய்தது போல் ஆகிவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 27, 2015

சனியின் பிடி


வணக்கம்!
         பல நண்பர்கள் என்னிடம் ஜாதகம் பார்க்க அவர்களின் ஜாதகத்தை அனுப்புகிறார்கள். அவர்களின் முதல் கேள்வி எனக்கு இப்பொழுது வேலை இல்லாமல் இருக்கின்றேன். செய்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டேன். மீண்டும் வேலை தேடுகிறேன் வேலை கிடைக்கவில்லை என்று கேட்கிறார்கள்.

இவர்களின் ஜாதகத்தை பார்த்தால் ஒன்று அஷ்டமசனியின் பிடியில் இருக்கின்றார்கள் அல்லது ஏழரை சனியின் பிடியில் இருக்கின்றார்கள். அஷ்டமனி மற்றும் ஏழரை சனியின் பிடியில் இருக்கும்பொழுது நாம் வேலை செய்துக்கொண்டிருக்கின்ற வேலையை விட்டுவிடகூடாது. நல்ல வேலை வருகின்றது என்றாலும் அந்த வேலை உறுதியாவிட்டது என்றால் வேலையை விடலாம்.

அஷ்டமசனி மற்றும் ஏழரை சனி இரண்டும் நமக்கு எது ஆதாரமாக இருக்கின்றதோ அதில் விளையாடிவிடும். அஷ்டமசனியின் காலத்தில் உடலில் விளையாடிவிடுவது உண்டு. அதிகம் நமது உடலில் தான் கை வைக்கும். 

சனியின் பிடி நமக்கு ஏற்பட்டது என்றால் நீங்கள் ஆஞ்சநேயருக்கு வழிபாடு செய்வது நல்லது. ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு செய்யலாம். திருநள்ளார் சென்று தீர்த்தம் ஆடிவிட்டு சாமிகும்பிட்டு வரலாம்.

நீங்கள் பரிகாரம் செய்யவேண்டும் என்றாலும் இதனை முதலில் செய்துவிட்டு அதன் பிறகு வேறு பரிகாரம் செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 26, 2015

அம்மன் அருள்


வணக்கம்!
          நான் எந்த ஒரு வேலையும் எடுத்தாலும் அதில் ஆன்மீகத்தை செலுத்த கால அவகாசம் எடுத்துக்கொண்டு தான் செய்வது உண்டு. சமீபகாலமாக ரியல் எஸ்டெட் பக்கம் ஆன்மீகத்தை செலுத்த ஆன்மீகத்தை தயார் செய்துக்கொண்டு வருகிறேன்.

நிலம் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு முருகன் காரணமாக இருந்தாலும் நமக்கு அம்மன் சரியாக செயல்படவேண்டும். அம்மன் ஒத்துழைப்பு இல்லை என்றால் ஒரு காரியமும் ஒழுங்காக நடைபெறாது.

இன்று நிலம் சம்பந்தப்பட்ட நபருக்கு பணம் வரவேண்டிய ஒன்று இருந்தது. நேற்றே அதற்க்கான வேலை எல்லாம் செய்துமுடித்துவிட்டு இருந்த நிலையில் இன்று பணம் தருவதாக சொன்னார்கள் என்று நண்பர் சொல்லிருந்தார்.

காலையில் கண்டியூர் இராமசுப்பிரமணியன் அம்மனை தரிசனம் செய்ய வருகிறேன் என்று சொல்லிருந்தார். அதற்காக அம்மனுக்கு பூஜை செய்ய தயார் செய்துக்கொண்டிருந்தேன். மதியம் பூஜை செய்யும்பொழுது நம் மனதில் ஒன்றை தெளிவுப்படுத்தியது. இன்று நிலம் சம்பந்தப்பட்ட விசயத்தில் பணம் வராது. அதற்கு காரணம் அஷ்டமி என்றது.

நானும் நண்பரிடம் போன் செய்து சொல்லிவிடலாம் இன்று நடைபெறாது என்று போன் செய்கிறேன். அவர் வாடிக்கையாளர் வீட்டில் இருந்து இப்பொழுது தான் வெளியில் வருகிறேன். அஷ்டமி என்பதால் பணத்தை இன்று தரவில்லை என்கிறார். அம்மனை பொறுத்தவரை நின்று இது தான் என்று சொல்லி அடிக்கும். அது தான் அம்மன் அருள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 25, 2015

ஒரு தெய்வ வழிபாடு


வணக்கம்!
          ஒரு மனிதன் வாழ்வில் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்று என்னிடம் ஒரு நண்பர் கேட்டுருந்தார்.

ஒரு மனிதன் நன்றாக சம்பாதித்து உயர்ந்த நிலைக்கு செல்லவேண்டும் என்றால் ஒரு தெய்வத்தை மட்டும் வணங்கிவந்தால் போதும். ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்தவேண்டும் என்றால் அவன் எல்லா தெய்வத்தையும் வணங்கி வரவேண்டும்.

என்னுடைய வேலை ஆன்மீகம் மட்டுமே. நான் ஆன்மீகத்திற்க்கு பல கோவில்கள் செல்லுவேன். நான் தொழில் செய்தால் ஒரு தெய்வத்தை மட்டும் தான் வணங்குவேன்.

ஒரு கிருத்துவனோ அல்லது முஸ்லீமோ தொழிலில் வெற்றி பெறவேண்டும் என்றால் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார்கள் ஆனால் இந்து வெற்றி பெறுவது கடினம். அதற்கு காரணம் பல தெய்வங்களை வணங்குவது.

நம்ம ஆட்கள் சிவன் கோவில் வரை சென்றுவிட்டு வருகிறேன் என்று செல்வார்கள். சிவனை வழிபட்டுவிட்டு அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று வழிபட்டு விட்டு வழியில் ஏதாவது ஒரு கோவிலுக்கும் சென்றுவிட்டு வருவார்கள். 

பல தெய்வங்களை வைத்தற்க்கு காரணம் அவன் அவனுக்கு என்ன வேண்டுமே அதனை வணங்கி பெற்றுக்கொள்வதற்க்கு வைத்தார்கள். ஏதாவது ஒன்றை நீங்கள் பெறவேண்டும் என்றால் அந்த தெய்வத்தை மட்டும் தொடர்ந்து வணங்கி வரவேண்டும் அந்த தெய்வம் உங்களுக்கு அதனை நடத்திக்கொடுத்த பிறகு அடுத்த தெய்வத்திடம் செல்லலாம்.

நிலம் வேண்டும் என்றால் முருகனை வணங்கி வரவேண்டும். முருகனை வணங்கி வரும் நேரத்தில் அதோடு சனிக்கிரகத்தையும் வணங்கினால் உங்களுக்கு நிலம் கிடைக்காது. பல தெய்வகுறுக்கீடு இருந்தால் அந்த காரியம் நடைபெறாது.

நம்ம ஆட்கள் இரத்தத்தில் ஊறிய விசயம் பல தெய்வங்களை வணங்குவது இதனை திருத்துவது என்பது நடைபெறாத ஒன்று. வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு தெய்வத்தை மட்டும் வணங்கிவாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, April 23, 2015

பெற்றோருக்கு


வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயத்தை இந்த உலகம் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கின்றது. சில பேர் கவனிக்கிறார்கள் பல பேர் கவனிப்பதில்லை.

தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளை கஷ்டப்படகூடாது என்று ஒவ்வொரு அப்பனும் கவலைப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள். அதில் அவர்களின் பிள்ளைகளை நல்ல சொகுசாக வாழவைக்கிறார்கள். சொகுசாக வளரும் பிள்ளைகளுக்கு தன் வாழ்வை சீராக வைத்துக்கொள்ள தெரியவில்லை அல்லது கற்றுக்கொடுக்கப்படுவதில்லை என்று எனக்கு ஒரு சிலரை பார்க்கும்பொழுது தோன்றுகிறது.

சொகுசாக வளரும் பிள்ளைகள் உலகத்தை கையாளும் விதத்தில் தோல்வியை தழுவுகிறது. உலக அறிவை கையாள கற்றுக்கொடுப்பதில்லை.

எங்கள் பகுதியில் செட்டியார் கடை இருக்கும் அந்த கடை முதலாளி தன் பிள்ளையை அடுத்த செட்டியார் கடையில் வேலை பார்க்க வைப்பார். தொழிலை அப்பொழுது தான் அவன் கற்றுக்கொள்வான் என்று அப்படி செய்வார்கள். செட்டி பிள்ளை கெட்டி பிள்ளை என்பார்கள்.

ஒரு சிலர் சொல்லுவார்கள் என் பிள்ளை கெட்டிகாரபிள்ளை என்பார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகள் வயதான காலத்தில் தன் பெற்றோருக்கு சோறுபோடுவதில்லை. ஏன் என்றால் மனைவி பேச்சை கேட்டுக்கொண்டு பெற்றோரை கவனிப்பதில்லை.

ஒரு சில இடத்தில் நான் கண்டதை உங்களிடம் சொல்லுகிறேன். இது உங்களுக்கு பிடித்திருந்தால் பின்பற்றி பாருங்கள். நல்ல சொத்து வசதி வாய்ப்பை ஒரு பையனுக்கு ஒரு அப்பன் சேர்த்து வைத்திருந்தால் அந்த சொத்தை அவன் அனுபவிப்பதில்லை. யாரோ ஒருத்தன் வந்து அனுபவித்துவிட்டு செல்லுகிறான்.

முக்கால்வாசி குடும்பங்களில் பையனின் மாமனார் வீட்டில் உள்ளவர்கள் வந்து அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு சாப்பாடு கிடைக்கமாட்டேன்கிறது. 

அவன் அவன் சம்பாதித்தை அவனே அனுபவிக்கவேண்டும். உங்களின் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்காதீர்கள்.நல்ல கல்வியை கொடுங்கள். நீயே இந்த உலகத்தில் சம்பாதித்துக்கொள் என்று சொல்லிவிடுங்கள்.

சொத்தை கொடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அந்த சொத்தைப்பற்றிய விபரத்தை பையனிடம் சொல்லாமல் அவனை உழைக்க வையுங்கள். கடைசி காலத்தில் அவனிடம் ஒப்படைத்துவிட்டு செல்லுங்கள். நான் சொன்னதை அப்படியே நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டாம். உலகத்தை பார்த்துவிட்டு ஏற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 22, 2015

திருவிழா


வணக்கம்! 
          நான் அடுத்தவருக்கு ஆன்மீகப்பணி செய்வதை விட என்னை மேம்படுத்திக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவது உண்டு. சொந்த விசயத்திற்க்கு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்வது உண்டு. 

தனிப்பட்ட நபர்கள் கூப்பிட்டால் அவர்களின் தேவைக்காக ஆன்மீக பயணம் செய்வேன். என்னுடைய தேவைக்கு தனியாக பல கோவிலுக்கு நானே அலைந்து கொண்டிருப்பேன். 

தற்பொழுது தென்தமிழகம் எங்கும் நிறைய கோவிலில் திருவிழாக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனக்கு தெரிந்த கோவிலுக்கு எல்லாம் சென்றுக்கொண்டு இருக்கிறேன். பல கோவிலுக்கு சென்று முடித்துவிட்டேன். இனியும் செல்லவேண்டும்.

தேர் திருவிழா நடந்தால் அந்த கோவிலுக்கு சென்று தேரை வடம் பிடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். தேர் நிலைக்கு வரும் வரை இழுப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. எனக்கு பிடித்தமான ஒன்றை உங்களுக்கும் பிடித்தது என்றால் நீங்களும் சென்று கலந்துக்கொள்ளுங்கள்.

தெய்வத்தை வைத்து நாம் சுமப்பது அல்லது இழுப்பது நமக்கு எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்று நினைத்துக்கொண்டு செயல்பட்டால் இதன் மீது விருப்பம் வந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 21, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
          கோயம்புத்தூர் சென்றவுடன் நண்பர் அங்கிருந்து கேரளா செல்ல வேண்டும் என்று அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். முதலில் நாங்கள் தரிசனம் செய்தது குருவாயூரப்பன். குருவாயூர் சென்று தரிசனம் செய்யும்பொழுது நல்ல கூட்டம் இருந்தது. கூட்டம் இருந்தாலும் நல்ல தரிசனம் கிடைத்தது.

கேரளாவை பொறுத்தவரை சாப்பாடு மட்டும் எனக்கு ஒத்துக்கொள்ளாது. சாப்பாடு எனக்கு பிடிக்காது. சைவ உணவு விடுதியை தேடி தேடி அலைவதற்க்குள் காரில் உள்ள பெட்ரோல் தீர்ந்துவிடும்.

கேரளாவில் சாப்பாட்டை கூடுமானவரை நான் தவிர்க்க பார்ப்பேன். சைவஉணவாகமாக இருந்தாலும் அங்கு சாப்பாடு அவ்வளவு கேவலமாக இருக்கும். குருவாயூரில் மட்டும் நல்ல சாப்பாடு கிடைத்தது அங்கேயே மதிய உணவை முடித்துக்கொண்டு சென்றுவிட்டோம்.

குருவாயூரை முடித்துக்கொண்டு கொச்சின் செல்வதாக திட்டம். வழியில் கொடுங்கலூர் பகவதி கோவில் இருந்தது ஆனால் அதற்கு செல்லாமல் கொச்சின் சென்றுவிட்டோம். கொச்சின் இருந்து சோட்டாணிக்கரை பகவதி அம்மனை தரிசனம் செய்வதற்க்கு சோட்டாணிக்கரை சென்றோம். மாலை நேரத்தில் நல்ல தரிசனம்.

சோட்டாணிக்கரை முடித்துவிட்டு கோயம்புத்தூர் வருவதற்கு இரவு ஒரு மணியாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கோயம்புத்தூரிலேயே இருந்தேன். பயணஏற்பாட்டை செய்வர்களுக்கு குறைந்தது முப்பதாயிரத்திற்க்கு மேல் செலவாகிவிடுகிறது. அவர்களுக்கே முழு நேரத்தையும் ஒதுக்கவேண்டியிருக்கிறது. அப்படி இருந்தும் ஒரு சில நண்பர்களை சந்தித்தேன். சந்திக்க முடியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம் அடுத்த முறை உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

உச்சம்


வணக்கம்!
          அரசகாலத்தில் எல்லாம் சோதிடம் சொல்லுபவர்கள் பில்லி சூனியம் வைக்கிறவன். இப்படிப்பட்ட வேலைகளை செய்பவர்களை எல்லாம் அரசன் அழைத்து அவர்களுக்கு வேண்டியதை செய்துக்கொடுத்து ஊருக்கு வெளியில் அல்லது காடுகளுக்கு சென்று தங்கிக்கொள்ள சொல்லிவிடுவார்கள். ஏன் என்றால இவர்கள் ஊருக்குள் இருந்தால் மக்களை சும்மா விடமாட்டார்கள். தேவையில்லாமல் பிரச்சினையை எழுப்பிவிட்டுவிடுவார்கள் என்று அரசன் அப்படி செய்தான். இன்று நிலை எப்படி என்று உங்களுக்கு தெரியும்.

அரசகாலத்தில அந்தபுரத்தை அலங்கரிக்க நிறைய பெண்கள் இருப்பார்கள் என்று புத்தகத்தில் படித்தது உண்டு. அந்த பெண்களை சோதிடர்கள் ஜாதகம் பார்த்து தான் வைத்திருப்பார்களாம். அதாவது அந்த பெண்களுக்கு ஏழாவது வீடு உச்ச வீடாக இருக்கவேண்டும் என்று பார்த்து வைப்பார்களாம். இது நண்பர்கள் சொன்ன கதை.

ஏழாவது வீடு உச்ச சம்பந்தப்பட்ட வீடாக இருந்தால் அந்த பெண்ணை மணப்பவர்கள் பெரியளவில் பிரபலமாகிவிடுவாகள். அவர்களின் வளர்ச்சி கனவில் கூட நினைத்து பார்க்கமுடியாத வளர்ச்சியாக இருக்கும்.

நான் சொன்னதை படித்துவிட்டு எனக்கு அந்த மாதிரி ஜாதக அமைப்பில் தான் பெண் வேண்டும் என்று கேட்காதீர்கள். தேடி தேடி காலம் சென்று தாத்தா மாதிரி ஆகிவிடுவீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 20, 2015

சனி தசா பகுதி 13


வணக்கம்!
          சனி தசாவைப்பற்றி பார்க்கலாம். மிதுனத்தில் சனி இருந்து ஒருவருக்கு சனி தசாவை நடத்தினால் எப்படிப்பட்ட பலனை தரும் என்பதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

புதனின் வீட்டில் சனிக்கிரகம் இருந்து தசாவை நடத்துகிறது. புதன் கிரகம் இரட்டை தன்மையுடைய கிரகம் என்பதால் இரண்டு விதமான பலனை கொடுக்கும். ஒருவர் வியாபாரம் செய்தால் கூட இரண்டு விதமான வியாபாரத்தில் இருந்து வருமானம் வருவது போல் செய்யும்.

பொதுவாக இந்த காலக்கட்டத்தில் ஏஜென்சி தொழில் நல்ல வருமானம் தரும் தொழிலாக அமையும். எனக்கு தெரிந்த ஒருவர் இருந்தார் அவர் வரன்களை அமைக்கும் புராேக்கர் தொழில் செய்து வந்தார். ஒரு முறை அவரின் ஜாதகத்தை நான் வாங்கி பார்த்தபொழுது அவருக்கு மிதுனத்தில் சனிக்கிரகம் அமர்ந்து தசாவை நடத்தி வந்தது.

ஒரு சிலருக்கு மிதுனத்தில் சனி அமர்ந்து தசாவை நடத்தும்பொழுது அவர்களுக்கு தோல் வியாதி கூட வந்திருக்கிறது. தேமலாவது தோலில் விழுகிறது. ஒரு சிலருக்கு தோலில் அரிப்பு போல் வந்து செல்லும்.

ஒரு சிலர் தன்னை விட கீழ் சாதியில் உள்ளவர்களிடம் மிகவும் விருப்பபட்டு பழகுவார்கள். தாழ்த்தப்பட்டவர்களிடம் உறவு நல்ல முறையில் இருக்கும். உங்களுக்கு உதபவர்கள் உங்களை விட வயதில் மூத்தவர்களாக இருக்ககூடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

போலியான யோகம்


வணக்கம்!
          கிராம பகுதிகளில் சோதிடம் பார்க்கும்பொழுது ஒரு சில சோதிடர்கள் ஒரு சில இளைஞர்களிடம் உன்னுடைய ஜாதகத்தில் மிகப்பெரிய யோகம் இருக்கின்றது. திடீர் என்று வரும் இந்த ஜாதகத்தை யாரிடமும் காட்டிவிடாதீர்கள் என்று சொல்லிவிடுவார்கள்.

அவனும் அந்த ஜாதகத்தை யாரிடமும் காட்டாமல் வைத்திருப்பான். அப்படி என்ன பெரிய யோகம் அந்த ஜாதகத்தில் இருக்கின்றது என்று பிடிவாதம் பிடித்து அதனை வாங்கி பார்த்தால் அந்த ஜாதகம் மிகப்பெரிய அளவில் அடிவாங்கிய ஜாதகமாக இருக்கும்.

நகர்புறத்தில் உள்ளவர்களிடம் கூட இப்படிப்பட்ட நபர்களை நாம் காணமுடியும். சோதிடர்கள் அந்த நேரத்தில் காசு பார்ப்பதற்க்கு ஏதாவது சொல்லிவிடுவது உண்டு. அதே நேரத்தில் நாம் பார்த்த ஜாதக பலன் நடைபெறாமல் போகலாம் இதனை அடுத்த சோதிடர்கள் கண்டுபிடித்து சொல்லிவிடுவார்கள் என்று இப்படி சொல்லிவிடுவதும் உண்டு.

சோதிடர்கள் இப்படி என்றால் குறி பார்ப்பவர்கள் உங்களிடம் ஒரு அம்மன் இருக்கின்றது என்று சொல்லிவிடுவதும் உண்டு. சும்மா இருப்பவனிடம் அம்மன் இருக்கின்றது என்றால் சும்மா இருப்பானா பணத்தை குறிப்பார்ப்பவனிடம் கொட்டமாட்டானா?

நமக்கு வரும் எந்த யோகத்தையும் எந்த சோதிடனும் எடுத்துக்கொள்ளமுடியாது. உனக்கு வரும் யோகம் உனக்குதான் சொந்தம் அதனை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. பெரிய ஆட்களின் ஜாதகம் எல்லாம் லட்சம் பேர் ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் அவர்களின் யோகத்தை தடுத்து நிறுத்திவிடலாம் அல்லவா. அதே நேரத்தில் உங்களிடம் அம்மன் இருக்கின்றது என்று சொல்லுவதும் இதே மாதிரியான ஒரு வியாபாரம் தான். 

இதனை எல்லாம் நீங்கள் நம்பாமல் உங்களின் ஜாதகத்தை நல்ல சோதிடர்களிடம் காண்பித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 19, 2015

பீடை


வணக்கம்!
    மனிதன் பணம் சம்பாதிக்காமல் இருந்தால் கூட இருக்கலாம். ஒரு மனிதன் பீடையோடு இருந்தான் என்றால் அவனால் இந்த ஜென்மத்தில் கரை சேரமுடியாது.

பல பேர்களை நான் பார்த்து இருக்கிறேன் அவர்களிடம் நாம் நெருங்கினாலே நமது உடலுக்குள் ஏதோ செய்வது போல் தோன்றும்.ஒரு சிலருக்கு கோவிலுக்குள் சென்றால் தூக்கம் வந்துவிடும். தூக்கம் வருவது போல் கோவிலுக்குள் செய்துக்கொண்டு இருப்பார்கள்.

பீடையை தான் பேய் ஓட்டுகிறேன் அல்லது கெட்ட ஆவியை ஓட்டுகிறேன் என்று பிற மதங்களில் செய்துக்கொண்டு இருப்பார்கள். பீடை ஒரு மனிதனை கீழே தள்ளிவிடும் என்பதால் மதங்கள் இந்த விசயத்தில் எச்சரிக்கையுடன் இருந்து அறிவுறுத்துக்கொண்டே இருக்கும்.

உங்களுக்கு பீடை இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் நன்றாக எண்ணெய் தேய்த்து குளியுங்கள். வெள்ளிக்கிழமை தைலகுளியல் குளியுங்கள். தினந்தோறும் கோவிலுக்கு சென்று வாருங்கள். அமாவாசை மற்றும் பெளர்ணமி ஏதாவது ஒரு சிவன் கோவிலில் கிரிவலம் செல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 18, 2015

சனி தசா பகுதி 12


வணக்கம்!
          சனித்தசாவைப்பற்றி பார்த்து நீண்ட நாட்களாவிட்டது. இனி தொடர்ந்து பார்க்கலாம். ரிஷபத்தில் சனி அமர்ந்து ஒருவருக்கு சனி தசா நடைபெற்றால் எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

எனது நண்பர் ஒருவருக்கு ரிஷபத்தில் சனி அமர்ந்து தசாவை நடத்தியது. சனியின் சுயபுத்தியில் அவன் நடைபாதை கடையில் பழம் விற்க்கும் தொழில் செய்து வந்தான்.சனியின் சுயபுத்தியால் அவனின் வியாபாரம் வரவுக்கும் செலவுக்கும் சமமாகவே இருந்து வந்தது.

சனியின் சுயபுத்தி முடிந்த பிறகு அவன் பழக்கடை ஒரு வாடகை கடைக்கு மாற்றினான். கொஞ்ச காலத்தில் எல்லாம் பழக்கடை பெரிதாகி பழங்களை மொத்தமாக வாங்கி விற்க்கும் அளவிற்க்கு பெரிய அளவில் அவன் உயர்ந்துவிட்டான்.

சுக்கிரனின் வீடாக இருப்பதால் பழ வியாபாரம் அவனுக்கு அமைந்திருக்கலாம். சனியும் அந்த வீட்டில் அமர்ந்து தசாவை நடுத்தும்பொழுது சுக்கிரன் மற்றும் சனியும் இரண்டு சேர்ந்து அவனுக்கு அப்படிப்பட்ட தொழிலில் வெற்றியை தந்து இருக்கலாம்.

ரிஷபத்தில் சனி அமர்ந்து தசாவை நடத்தும்பொழுது தானியம் வழியாக உங்களுக்கு வருமானம் வரும். வியாபாரம் வழியாக லாபம் வரும். பூ பழங்கள் ஆதாயம் உண்டு. நிறைய தர்மங்கள் செய்வர்களாக இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

உச்சம்


வணக்கம்!
          உச்ச கிரகத்தைப்பற்றி பார்த்து வந்தோம். அவ்வப்பொழுது மனதில் என்ன நினைக்கிறானோ அதனைப்பற்றி எழுதுவது உண்டு. தற்பொழுது உச்சகிரகத்தைப்பற்றி எண்ணங்கள் அதிகம் வருவதால் அதனைப்பற்றி நாம் பார்ப்போம்.

பொதுவாக மறைவு ஸ்தான அதிபதி உச்சம்பெறுவது நல்லதல்ல என்று சொன்னாலும் ஒரு சிலருக்கு நல்லது செய்யும் என்பதைப்பற்றி பார்த்தோம்.

சுபக்கிரமான குரு கிரகம் உச்சம் பெற்றால் நல்லது என்று சொல்லுவார்கள். அதே நேரத்தில் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு குரு உச்சம் பெறுவது அவ்வளவு சிறப்பான பலனை தராது. அதிலும் ரிஷப ராசிக்காரர்கள் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். சம்பந்தமே இல்லாமல் மாட்டிக்கொள்வார்கள். தற்பொழுது குரு கிரகம் உச்சத்தில் தான் உள்ளது என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

சிம்ம ராசிக்கு குரு கிரகம் அஷ்டமாதியாக வந்தாலும் சிம்மராசிக்கு பெரிய பாதிப்பை தந்துவிடாது. சூரியனின் வீடாக சிம்மம் இருப்பதால் பாதிப்பு குறைவாக இருக்கிறது. இது அனுபவத்தில் நான் பல பேரின் ஜாதகத்தில் பார்த்து இருக்கிறேன்.

ஒவ்வொருவரின் ஜாதகத்தை பொறுத்து உச்சம் பெறும் பலம் மாறுபடுகிறது. தசாவையும் நாம் கணக்கில் கொண்டு தான் பலனை சொல்லவேண்டும். எடுத்தோம் கவிழ்தோம் என்று பலனை சொல்லகூடாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 17, 2015

நம்பினால் நம்புங்கள்


வணக்கம்!
         நம்பினால் நம்புங்கள் எழுதி நீண்ட நாட்களாவிட்டது. நம்மை தேடி வரும் நண்பர்களுக்கு அவர்களின் ஜாதகத்தை வைத்து குரு ஏழில் இருந்து கோச்சாரப்பலனை தந்தால் எப்படி பலன் வருமோ அது போல் தான் பலன் தருவது உண்டு.

ஒவ்வொரு ராசிக்கும் குருக்கிரகம் ஏழாவது வீட்டிற்க்கு வரும்பொழுது நல்ல பலனை கொடுக்கும். அதேப்போல் தான் பலனை கொடுக்கிறேன். 

ஒவ்வொருவருக்கும் இப்பொழுது பலனை கொடுப்பதில் அம்மனை வைத்து மிகப்பெரிய அளவில் நடத்திக்கொடுக்கிறேன். வரும் நபர்கள் திக்குமுக்காடி போகும் அளவிற்க்கு கொடுக்கிறேன். அம்மன் என்றால் என்ன என்று காட்டிக்கொடுக்கிறேன்.

சித்தர்களைப்பற்றியும் அவர்கள் செய்த சித்து விளையாட்டுக்களையும் உங்களுக்கு நன்கு தெரியும். அதில் சித்தர்கள் பறக்கிறார்கள் என்று கேள்விபட்டு இருப்போம். ஒரு மனிதன் பூமியை விட்டு மேல் எழும்பி பறக்கமுடியும். வெளியில் இதனை நிருப்பிப்பது கடினம்.ஆன்மீக சாதனை செய்பவர்கள் தொடர் முயற்சியால் இதனை செய்யமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆன்மீகம்


வணக்கம்!
          இன்றைய காலத்தில் ஆன்மீகம் அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளது. ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று பொதுவாக அனைவரும் நினைக்கின்றனர். ஒவ்வொரு ஆன்மீகவாதியிடமும் சென்றுக்கொண்டே இருக்கின்றனர்.

ஆன்மீகத்திற்க்கு என்று இது தான் வரைமுறை என்று ஒவ்வொரு ஆன்மீகவாதியும் விதிமுறையை வைத்துக்கொண்டு ஆன்மீகத்தை கற்றுக்கொடுத்து வருகின்றனர். பல பேர்கள் இந்த விதிமுறையை பார்த்தே ஆன்மீகம் வேண்டாம் என்று ஒதுங்கிவிடுகின்றனர்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றால் காலையில் நான்கு மணிக்கு எல்லாம் எழுந்துவிட வேண்டும் என்று சொன்னார்கள். விடியற்காலையில் நான்கு மணிக்கு எல்லாம் யாரால் எழுந்திருக்கமுடியும் அதனால் நான் அதற்கு வரவில்லை என்று சொன்னார்.

ஒரு நல்ல குருவிடம் நீங்கள் சென்றால் அந்த குரு நீங்கள் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் எந்த வித கட்டளையும் இல்லாமல் உங்களை மிக உயர்ந்த ஒரு இடத்திற்க்கு உங்களை கொண்டு செல்வார். 

நாம் இந்த தவறு செய்திருக்கிறோம் அந்த தவறு செய்திருக்கிறோம் என்பதைப்பற்றி எல்லாம் கவலையில்லை. அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார். உங்களை மிக உயர்ந்த ஒரு நிலையை அந்த குரு செய்து தருவார். இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

இன்று மதியம் கோயம்புத்தூர் பயணம். பதிவுகள் வழக்கம்போல் வரும் பதிவுகள் தானாகவே வருவதுபோல் செய்துவிட்டு செல்லுகிறேன் தினமும் வந்து படியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நல்லெண்ணெய் முறித்தல்


வணக்கம்!
          நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிருக்கிறேன். ஒரு சிலருக்கு இந்த நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும்பொழுது அவர்களின் உடலுக்கு ஏற்றுக்கொள்வதில்லை. நீர்கோர்வை அல்லது தலைபாரம் ஏற்படுவது உண்டு.

பல நண்பர்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு எனக்கு அன்று முழுவதும் தலைவலி இருந்தது என்று சொல்லியுள்ளார்கள். இது ஏன் ஏற்படுகிறது என்றால் இதுவரை தேய்த்து குளிக்காமல் இருந்துவிட்டு திடீர் என்று குளிக்கும்பொழுது இப்படி ஏற்படுவது உண்டு.

நல்லெண்ணெய்யின் இயற்கை தன்மையின் வேகம் அதிகமாக இருக்கும்பொழுது இப்படி ஏற்படுவது உண்டு. கிராமங்களில் நல்லெண்ணெயை முறித்துவிட்டு அதன் பிறகு தேய்த்து குளிப்பார்கள்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி அதில் பூண்டு மிளகாய் வேப்பிலை  போட்டு கொஞ்சம் சூடு ஏற்றினால் அந்த நல்லெண்ணெய் முறிந்துவிடும். அதனை அடுப்பில் இருந்து இறக்கி மிதமான சூட்டில் தலையில் தேய்த்து குளித்தால் மேலை சொன்ன பிரச்சினை வராது. மிளகாயை பிய்த்து போடாமல் முழு மிளகாயாக போடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, April 16, 2015

பிரதோஷம்


வணக்கம்!
          இன்று பிரதோஷம். பிரதோஷம் அன்று நான் சிவபூஜை செய்ய சொல்லிருந்தேன். இதனை எத்தனை பேர் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. 

ஒரு முறை நான் குருவிடம் ஏன் இத்தனை பேர் நாட்டில் இருக்கும்பொழுது என்னிடம் வந்து இதனை கொடுத்தீர்கள் என்று கேட்டேன்.அவர் என்னிடம் முதலில் கொடுத்த மந்திரத்தை இன்று வரை நீ செய்துக்கொண்டிருக்கிறாய் அல்லவா அந்த தொடர்ச்சியான கடமையை செய்பவனுக்கு தான் கொடுக்கவேண்டும் என்பது பிரபஞ்ச விதி அதனால் தான் உன்னிடம் வந்துள்ளது என்றார்.

பல நாட்கள் ஒரு வழிப்பாட்டை செய்து வரும்பொழுது அது உங்களை உயர்த்தும். இன்று பிரதோஷ வழிபாடு நீங்கள் பிரதோஷ வழிப்பாட்டை செய்யுங்கள். அபிஷேகத்திற்க்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுங்கள்.

நாளை மதியம் கோயம்புத்தூர் பயணம். இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கியிருப்பேன்.சந்திக்க விருப்பம் இருப்பவர் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். ஒய்வு நேரத்தில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அஷ்டமாபதி உச்சம்


வணக்கம்!
          ஒரு கிரகம் உச்சம் பெற்றால் நல்லது என்பதை சொல்லிருக்கிறேன். ஒருவரின் ஜாதகத்தில் அஷ்டமாபதி உச்சம் பெற்றால் அந்த நபருக்கு பல சிக்கல் வரும் என்று சோதிடத்தில் சொல்லுவார்கள்.

உதாரணத்திற்க்கு மகரராசிக்கு அஷ்டமாபதியான சூரியன் தற்பொழுது உச்சம் பெற்று இருக்கிறது. மகரராசிக்காரர்கள் வண்டி வாகனத்தில் செல்லும்பொழுது எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் விபத்துக்கள் ஏற்படலாம்.

ஒரு சிலருக்கு அஷ்டமாபதி உச்சம் பெற்றால் நல்லது நடக்கும். என்னுடைய நண்பர் ஒருவருக்கு மகரராசி. அவர் பைக் ஒன்று வாங்கியிருந்தார்.பைக் லோன் மூலம் வாங்கியிருந்தார். அவர் பைக் வாங்கி ஆறு மாதக்காலம் ஆகிவிட்டது. பைக் வாங்கிய கம்பெனி அவருக்கு அதற்கான உரிம சான்றிதழ்களை தராமல் இருந்தது. லோன் வழியாக வாங்கி இருப்பதால் உரிம சான்றிதழ் நகலையாவது தந்து இருக்கவேண்டும் ஆனால் அந்த கம்பெனி கொடுக்கவில்லை. பல தடவை அலைந்தும் கொடுக்கவில்லை.

என்னிடம் அவர் சொன்னார். அவரின் ஜாதகத்தை நான் ஏற்கனவே பார்த்து இருந்ததால் அவரிடம் தமிழ் வருடப்பிறப்பிற்க்கு பிறகு கிடைக்கும் அதுவரை பொறுமையாக இரு என்று சொன்னேன். சூரியன் உச்சம் பெற்று இரண்டாவது நாள் அவருக்குரிய உரிமத்தை கம்பெனி கொடுத்தது. ஒரு சிலருக்கு அஷ்டமாபதி உச்சம் பெற்றால் நல்லதும் நடக்கும்.

பல பேர்க்கு நான் மறைவு ஸ்தானத்தில் உள்ள பலனை எடுத்து லக் அடிக்க வைத்திருக்கிறேன். மறைவு ஸ்தானத்தில் பல நல்லது ஒழிந்து இருக்கிறது. பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் நல்லதை நாம் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 15, 2015

முருகனும் நிலமும்


வணக்கம்!
          நிறைய செவ்வாய் கிரகம் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று வந்தேன். அதாவது செவ்வாய் கிரகத்திற்க்கு உரிய தேவதையான முருகனின் கோவிலுக்கு சென்று வந்தேன். தனிப்பட்ட முறையில் முருகனுக்கு நிறைய பூஜைகள் செய்தேன்.

நிலம் சம்பந்தப்பட்ட விசயத்தில் மட்டும் நான் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தேன். அதனை நான் பலமுறை பதிவில் சொல்லிருக்கிறேன். ஏன் அதற்குள் நான் செல்லவில்லை என்றால் நிலம் சம்பந்தப்பட்ட விசயங்களை செய்யும்பொழுது செவ்வாய் கிரகம் மற்றும் அதனை சம்பந்தப்பட்ட தெய்வங்கள் எல்லாம் மிகவும் அபாயகரமான தெய்வங்கள். அவர்களை வைத்து வேலை செய்வதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.

முருகனை வணங்கியதால் எனக்கு நிலம் சம்பந்தப்பட்ட தொழில் தேடிவந்தன. சரி வந்ததை செய்வோம் என்று செய்து அதில் வெற்றியும் கண்டுவிட்டேன். இதில் பல வெற்றிகளை நான் ஏற்கனவே பார்த்து இருந்தாலும் தொழிலாக நான் செய்யாமல் இருந்தேன். முதன் முதலில் இதனை தொழிலுக்கு இப்பொழுது தான் செய்தேன்.

நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ள சிக்கல் அதாவது ஆன்மீக சிக்கல் என்ன என்றால் சம்பந்தப்பட்ட நிலம் கோவிலுக்கு சொந்தமாக இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு ஆன்மீகவாதிக்கு சொந்தமாக இருக்கலாம். ஒரு சில இடத்தில் துர் ஆத்மாக்கள் அல்லது துர் தேவதைகள் இருக்கும் இடமாக இருக்கின்றது இதனை நாம் பார்த்து தான் செய்யவேண்டியுள்ளது. இப்படிப்பட்ட இடங்களை நாம் தேர்வு செய்யும்பொழுது அந்த தொழில் உங்களை கவிழ்த்துவிடும்.

நீங்கள் நிலம் மற்றும் வீடு கட்டும் தொழிலில் இருந்தால் முருகனுக்கு என்று நிறைய செய்யுங்கள். நிலம் மற்றும் கட்டிடம் கட்டும் தொழிலில் இருந்தால் அதில் பணம் நிறைய வரும். அந்த பணத்திற்க்கு தகுந்தவாறு முருகனுக்கு நீங்கள் நிறைய செய்யவேண்டும். அப்படி செய்து வந்தால் உங்களின் தொழிலை முருகன் மிகப்பெரிய அளவில் விரிவு செய்து தருவார்.

நிலம் சம்பந்தப்பட்ட தொழிலுக்கு ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து செய்துக்கொடுத்து வருகிறேன். அதனை பார்த்துவிட்டு விரைவில் பதிவில் அறிவிப்பை தருகிறேன் அப்பொழுது புதிய நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு உங்களின் வெற்றிக்கு வழி செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கிரக பாதிப்பு பரிகாரம்


வணக்கம் !
          கிரக பாதிப்பு பரிகாரம் பதிவை பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ஒரு சில மனிதர்களின் ஜாதகத்தை பார்த்தாலே தெரியும் இவன் தேறமாட்டான் என்று புரியும். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு எவ்வளவு கோவில் குளம் அலைந்தும் பயன் இல்லை என்று வரும்பொழுது அவர்களுக்கு என்று தனிப்பட்ட பூஜை செய்வது உண்டு.

சம்பந்தப்பட்ட நபருக்கு நாங்களே அடிக்கடி எங்களின் இடத்தில் ஹோமம் செய்வது உண்டு. அக்னியின் தத்துவம் அதிகம் ஆத்மாவில் இருப்பதால் அக்னியை வளர்த்து அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம்.

நான் நெய் வாங்கிய செலவுக்கு ஒரு வீட்டை கட்டி இருக்கலாம் அந்தளவுக்கு நெய் வாங்கி இருக்கிறேன். மனிதன் கலியுகத்தில் இருப்பதால் நாம் நல்லது செய்தவுடன் அவன் ஒடிவிடுவான்.

ஹோமம் செய்து அந்த நபரின் ஜாதகத்தை வைத்து நாங்கள் வேலை செய்வது உண்டு. அப்படி செய்யும்பொழுது சம்பந்தப்பட்ட நபர் எப்படிப்பட்ட கீழ் நிலையில் இருந்தாலும் அந்த நபர் குறைந்த காலத்தில் மேம்பட்ட நிலையில் இருப்பார்.

தியானம் யோக எல்லாம் உங்களின் தனிப்பட்ட ஆத்மாவை உயர்த்தும். பூஜை ஹோமம் என்பது பிறரையும் வாழவைக்கிற ஒரு அற்புதமான கருவி. இதனை தான் நான் பிறர்க்கு செய்து நல்லது செய்ய வைக்கிறேன்.

நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால் எங்கு ஹோமம் நடைபெறுகிறதோ அந்த ஹோமத்திற்க்கு சென்று வருவது நல்லது. கிரகபாதிப்பிற்க்கு ஒரு அற்புதமான பரிகாரம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 14, 2015

இனிய தொடக்கம்


ணக்கம்!
          இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி நிலைத்து நிற்க அம்மன் அருள் செய்யும்.


உங்களின் ஜாதககதம்பம் இன்று ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்தளவுக்கு வளர்ச்சியை கண்டதற்க்கு உங்களின் அனைவருக்கும் மனமார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

ஆன்மீக உயிர் கொடுத்த குருவின் பாதம் அடிபணிந்து அம்மன் அருள் புரிந்து பல ஆண்டுகள் உங்களுக்கு பதிவு கொடுக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

ஜாதககதம்பத்தில் தற்பொழுது பதிவுகள் குறைவாக கொடுத்துக்கொண்டிருக்கிறேன் அதனை மாற்றி நிறைய பதிவுகள் இனி கொடுக்க விரும்புகிறேன். 

ஜாதககதம்பத்திற்க்கு உதவும் நண்பர் கிருஷ்ணப்ப சரவணன் அவர்களுக்கு நன்றி.

ஜாதககதம்பத்தில் பின்னோட்டம் இடும் நண்பர் பரமேஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொழில் செய்யும் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வருடத்தில் இருந்து பல நல்ல பதிவுகள் உங்களை மாற்றும் பதிவுகளாக வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 13, 2015

நன்றி


வணக்கம்!
         ஜாதககதம்பம் எழுத ஆரம்பித்து ஐந்து வருடங்கள் முடிவடைந்த நிலையில் பல நல்ல விசயங்களை நான் நினைவுப்படுத்தி பார்க்கிறேன்.

ஜாதககதம்பம் வழியாக எனக்கு மிகப்பெரிய வட்டாரம் உருவாகியுள்ளது. இவர்கள் எல்லாம் என்னை சந்திப்பார்களாக என்று சொல்லும் மிகப்பெரிய ஆட்கள் கூட என்னை வந்து சந்தித்து சென்று இருக்கிறார்கள். இன்றைய தேதிக்கு மிகவும் பிஸியாக இருப்பதற்க்கும் ஜாதககதம்பம் வழியாக வந்த நண்பர்கள் தான் காரணம் என்று சொல்லமுடியும்.

ஆன்மீகப்பயிற்ச்சிக்கு அதுவும் மிகவும் சவாலான ஆன்மீகப்பயிற்சி எல்லாம் ஜாதககதம்பம் வழியாக வந்த நண்பர்களாக தான் நான் மேற்க்கொண்டு இருக்கிறேன்.

பல நண்பர்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தி எழுத வைத்து இருக்கிறார்கள். என்னைப்போல் பதிவு எழுதும் நண்பர்கள் அவர்களின் பதிவுகளில் ஜாதககதம்பத்தைப்பற்றி சொல்லி எனக்கு பல நண்பர்களை பெற்றும் தந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் மனமார நன்றி சொல்லுகிறேன்.

மனித வாழ்க்கையில் உதவுபவனை மறக்கும் உலகம் இந்த கலியுகம். இக்கட்டான நேரத்தில் நமக்கு உதவுபவன் மனிதனாக இருக்கமுடியாது அவர்கள் கடவுளாக தான் இருப்பார்கள் என்பதை இந்த உலகம் எனக்கு பலமுறை செய்துக்காட்டி இருக்கிறது. ஜாதககதம்பம் வழியாக என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு உதவியவர்கள் இருக்கிறார்கள். அந்த நண்பர்களை நான் பதிவில் சொல்லியே ஆகவேண்டும். 

இப்படிப்பட்ட உதபவர்களை நாம் மறந்துவிடுவோம் ஆனால் நான் மறக்கவில்லை அவர்களை நான் சொல்லியே ஆகவேண்டும் என்பதற்க்காக தான் அவர்களின் பெயரை பதிவில் சொல்லுகிறேன்.

சிங்கபூரை சேர்ந்த திரு செந்தில்குமார் அவர்கள்.
சேலத்தை சேர்ந்த திரு சிவக்குமார் அவர்கள்.
ராசிப்புரத்தை சேர்ந்த திரு ராஜ்குமார் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு தமிழ்செல்வன் அவர்கள்.
திருப்பூரை சேர்ந்த ஒரு பெண்மணி.
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

இவர்கள் பதிவு வழியாக வந்து என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு உதவியவர்கள் இவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

பல விசயங்களில் பல்வேறு நண்பர்கள் எனக்கு நேர்முகமாகவும் மறைமுகமாவும் எனக்கு உதவி இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய தனிப்பட்ட நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நல்ல காலம்


வணக்கம்!
          நாளை தமிழ்வருடபிறப்பு நமது ஜாதககதம்பம் தொடங்கப்பட்ட நாள். நாளை தமிழ்வருடபிறப்பு மன்மத வருடம் பிறக்கிறது. அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று இன்றே நான் பிராத்தனை செய்துக்கொள்கிறேன். இன்று ஏன் பிராத்தனை செய்கிறேன் என்றால் இன்று திருவோண நட்சத்திரம் என்பதால் பிராத்தனை செய்கிறேன்.

சூரியன் நாளை மேஷத்தில் உச்சம் பெறபோகிறார். சிம்ம ராசிக்கு இந்த  காலம் பொற்காலம் என்றே சொல்லலாம்.சிம்ம ராசிக்காரர்கள் நல்லமுறையில் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்களின் ராசி நாதன் உச்சம்பெறும் காலம் பொற்காலமாக அமையும். ஒரு சில ராசிநாதன் ஒரு மாதக்காலம் மட்டும் உச்சம்பெறும் அதன் பிறகு கிரகம் மாறிவிடும். சனிக்கிரகம் குறைந்தது இரண்டரை வருடகாலம் உச்சம்பெற்று அந்த ராசிக்காரரை அதாவது மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மையை தரும்.

குரு கிரகம் என்றால் ஒரு வருடக்காலம் உச்சம் பெற்று நல்லது செய்யும். ராசிநாதன் உச்சம்பெறும்பொழுது நமது நடவடிக்கை எல்லாம் துரிதப்படுத்தி செயல்படவேண்டும். ராசிநாதன் உச்சம்பெற்றுவிட்டார் அவரே நல்லது செய்வார் என்று உட்கார்ந்து இருக்ககூடாது.நாம் இதுவரை எந்த காரியத்தை எல்லாம் செய்யவேண்டும் என்று நினைத்து இருந்தமோ அந்த காரியத்தை எல்லாம் செயல்படுத்தும்பொழுது நமக்கு வெற்றி கிடைக்கும்.

வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை என்று சொல்லும் ஆட்கள் எல்லோருக்கும் ஒரு செட்டில்மெண்ட்டை கொடுப்பது உங்களின் ராசிநாதன் உச்சம்பெறும் காலத்தில் அதிகம் நடைபெறும்.

நான் ஆன்மீக வேலை செய்யும் நண்பர்கள் எல்லாேருரிடத்திலும் சொல்லும் சொல் கிரகம் நமக்காக காத்துக்கொண்டிருக்காது நாம் தான் கிரகத்திற்க்கு காத்துக்கொண்டிருக்கவேண்டும். தற்பொழுது நல்ல நேரம் உனக்கு என்றால் அவசரமாக வேலை செய் என்பேன். கிரகங்கள் நல்லது செய்யும்பொழுது நாம் விழித்துக்கொள்ளவேண்டும்.

உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் எப்பொழுது நல்லது செய்யும் என்று தெரிந்து வைத்துக்கொண்டு செயல்பட்டால் நல்ல வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 12, 2015

பால் குடம்


வணக்கம்!
         இன்று நமது அம்மன் கோவிலில் விஷேசம். எங்கள் பகுதியில் இருக்கும் கரம்பயம் மாரியம்மன் கோவில் திருவிழா. மாரியம்மன் கோவிலுக்கு நமது அம்மன் கோவிலில் இருந்து பால்காவடி பால்குடம் எடுத்து செல்வார்கள்.

ஒவ்வொரு ஊருக்கும் மாரியம்மன் காேவில் இருக்கும். பெரும்பாலும் தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள் எல்லாம் மாரியம்மன் தான் ஊர்காவல்தெய்வமாக இருக்கும். அதற்கு ஆடி அல்லது சித்திரை மாதங்களில் திருவிழா நடைபெறும். 

எங்கள் ஊரில் உள்ள மாரியம்மனுக்கு இன்று பால் குடம் மற்றும் பால்காவடி நமது அம்மன் கோவிலில் இருந்து எடுத்து சென்று மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

இன்று இரவு எங்களின் ஊரில் மாரியம்மனுக்கு படையல் நடைபெறும். வருடத்திற்க்கு ஒரு முறை நடைபெறும் இந்த படையல் மிகவும் விஷேசமானது. இதற்கு நைவேத்தியமாக கொழுக்கட்டை செய்வார்கள். உங்களின் ஊரிலும் இப்படிப்பட்ட விஷேசம் இருக்கின்றதா என்பதை சொல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம் !
         நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு



அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 10, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          நமது அம்மன் பூஜை 11/04/2015 சனிக்கிழமை நடைபெறும். அம்மனின் பூஜைக்கு காணிக்கை அளித்தவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு சுப்பிரமணியன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு சம்பத் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
தூத்துகுடியை சேர்ந்த திரு கலைராஜன் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
மஸ்கட்டை சேர்ந்த திரு கரிகாலன் அவர்கள்.
கண்டியூரை சேர்ந்த திரு இராமசுப்பிரமணியன் அவர்கள்.
திரு சத்திய சீதாராமன் அவர்கள் .

வழக்கம்போல் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்
மற்றும் பல நண்பர்கள் பணம் அனுப்பியுள்ளனர்.


சென்னையை சேர்ந்த திரு சம்பத் அவர்கள் மாதம்தோறும் அம்மன் பூஜைக்கு என்று பூஜை ஆரம்பித்த நாட்களில் இருந்து பணம் அனுப்பியவர். அவரின் பெயரை ஏதாவது ஒரு காரணத்தால் நான் போடுவதற்க்கு மறந்துவிடுவேன். 

இனிமேல் பணம் அனுப்புவர்கள் அனைவரும் எனது ஈ மெயில்  முகவரிக்கு அல்லது செல்போன் எண்ணிற்க்கு உங்களைப்பற்றி தகவல்களை அனுப்பிவிடுங்கள்.

அம்மனின் பூஜை மாலை ஏழு மணிக்கு நடைபெறும். அனைவரும் அந்த நேரத்தில் அம்மனிடம் பிராத்தனை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, April 9, 2015

கிரகத்தை மாற்றும் வேலை


வணக்கம்!
          நண்பர்கள் என்னை சந்திப்பதே அவர்களுடைய ஜாதகத்தில் உள்ள கிரகங்களை எப்படியாவது மாற்றிக்கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் என்னை சந்திக்கிறார்கள் அல்லது தொடர்புக்கொள்கிறார்கள்.

ஜாதககதம்பத்தில் உள்ள கருத்துக்கள் எல்லாம் ஆன்மீகத்திற்க்குள் என்ன செய்கிறோம் என்பதை உங்களிடம் சொல்லுவதற்க்கு எழுதுகிறேன். சனி மாற்றி தருகிறேன். செவ்வாய் கிரகத்தை மாற்றி தருகிறேன் என்று சொல்லி உங்களிடம் காசு பறிக்கும் வேலை இல்லை.

பொதுவாக நான் பரிகாரம் செய்வதற்க்கு போவது கிடையாது. என்னிடம் வரும் நபர்களிடம் இத்தனை நாளில் உனக்கு நடத்திக்கொடுத்துவிடுகிறேன். காரியம் முடிந்தவுடன் பணத்தை வைத்துவிடவேண்டும் என்று சொல்லிவிடுவேன். சொன்ன நாளில் பணம் அவர்களுக்கு வந்துவிடும். அவர்களும் எனக்கு கொடுத்துவிடுவார்கள். இது தான் இது நாள் வரை நடக்கும் செயல்.

உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்பதை நான் வெளியில் அதிகம் சொல்லுவதில்லை. யாராவது வந்து எனக்கு அந்த கிரகத்தை மாற்றிக்கொடுங்கள் என்று எல்லாம் கேட்காதீர்கள்.

ஒருவருக்கு உடனே ரிசல்ட் வருவதற்க்கு நல்ல வழியை விட தீயவழி நன்றாக கைகொடுக்கும் ஆனால் நான் அதனை செய்வதில்லை. உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அந்த குடும்பமும் நன்றாக வரவேண்டும் என்பதற்க்காக பொறுமையாக ரிசல்ட் கொடுக்கிறேன். இதற்க்கும் நாள் கணக்கை வைத்து தான் கொடுக்கிறேன்.

நம்பிக்கையோடு வாருங்கள். நல்லது நடக்கும். உங்களின் மேல் நானும் நம்பிக்கை வைக்கிறேன். அம்மனை வைத்து செய்வோம் நல்லது நடக்கும். கிரகத்தை மாற்றிக்கொடுங்கள் என்று எல்லாம் கேட்காதீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

திருவிழா


வணக்கம்!
          தென்மாவட்டங்கள் முழுவதும் தற்பொழுது கோவில்களில் திருவிழா நடைபெறும். பல நண்பர்கள் ஊரை விட்டு பணியின் காரணமாக வெளியூர்களில் தங்கியிருப்பார்கள். அப்படிப்பட்ட நபர்கள் வேலை இருக்கிறது இந்த முறை திருவிழாவிற்க்கு செல்லவேண்டாம் அடுத்தமுறை திருவிழாவிற்க்கு செல்லலாம் என்று இருப்பார்கள்.

எப்பொழுதும் இருக்கின்ற கோவில் தான் எப்பொழுதும் இருக்கின்ற தெய்வம் தான் என்று சொல்லிக்கொண்டும் இருப்பார்கள். எப்பொழுதும் இருக்கின்ற தெய்வம் என்றாலும் திருவிழா காலங்களில் விஷேசமாக அலங்கரிப்பார்கள். சிறப்பான ஆராதனைகள் நடைபெறும். அப்படிப்பட்ட காலங்களில் எப்பொழுதும் இருக்கும் தெய்வத்தின் இருந்து அதிகப்படியான சக்தி வெளிப்படும்.

அதிகமான சக்தியை நாம் திருவிழா காலங்களில் பெறலாம். நம்மிடம் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்வதற்க்கு இப்படிப்பட்ட திருவிழாகளை தவிர்க்காமல் சென்றுவாருங்கள்.

திருவிழாவிற்க்கு உங்களின் வாரிசுகளை அழைத்துக்கொண்டு சென்று காண்பியுங்கள். இது ஒரு பாடமாகமோ அவர்களுக்கு அமையும்.உங்களின் குலதெய்வத்தின் திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ளும்பொழுது இந்த வருடத்திற்க்கு உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் செல்ல உங்களின் குலதெய்வம் அருள்புரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 8, 2015

காடு


வணக்கம்!
         ஆந்திராவில் செம்மரகடத்தல் என்ற பெயரில் தொழிலாளிகளை சுட்டுக்கொன்றனர் என்ற செய்தியை பார்த்தேன். இதனைப்பற்றி நான் ஒரு பதிவில் ஏற்கனவே சொல்லிருந்தேன். இனிமேல் காடுகளுக்கு சென்று எந்தவித ஆன்மீகப்பயிற்சியும் செய்யமுடியாது என்பதை சொல்லிருந்தேன். அதுப்போலவே நடந்துள்ளது.

காட்டிற்க்குள் தவறு நடந்ததா அல்லது நடக்கவில்லையா என்பதைப்பற்றி எல்லாம் நாம் ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை. பொதுவாகவே காடுகளை மனிதன் அழிக்க தொடங்கிவிட்டான். காடுகளில் மனிதன் பாதுகாக்கிறேன் என்று சொல்லி அதனை அழிக்கதான் தொடங்கியுள்ளான். பாதுகாப்பு என்ற பெயரில் காவலில் இருப்பவர்களே காடுகளை அழிப்பது எல்லாம் நடைபெறுகிறது.

இந்தியா ஆன்மீகத்திற்க்கு ஏற்ற நாடு என்பது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. இங்குள்ள சூழ்நிலை மாறிவருகிறது. இப்படியே சென்றால் கொஞ்ச காலத்தில் அதாவது நாம் வாழும் காலத்திலேயே ஆன்மீகத்திற்க்கும் இந்தியாவிற்க்கும் சம்பந்தமே இல்லை என்ற நிலை கூட ஏற்படலாம்.

காடுகளில் உள்ள மூலிகைகளால் தான் இந்தியா சக்தி மிகுந்த நாடாக இருக்கிறது. இங்குள்ள கோவில்களுக்கு இந்த மூலிகைகள் தான் சக்தியை தருகிறது. அதனை எல்லாம் அழிக்கும் வேலையாக தான் நிறைய பேர் செய்து வருகின்றனர்.

நாங்கள் காடுகளுக்கு செல்லும்பொழுது காடுகளில் உள்ள மரங்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ எந்த வித சிறு தொந்தரவும் செய்தது கிடையாது. நமது எண்ணத்தில் சிறிய கெட்ட எண்ணங்கள் இருந்தால் கூட அதன் ஒரிஜினல் தன்மை அழிந்துவிடும் என்பதால் நல்ல எண்ணத்தோடு காடுகளுக்கு சென்று வரவேண்டும் என்று குரு சொல்லுவார்.

தற்பொழுது உள்ள சூழ்நிலையிலேயே நீங்கள் எல்லாம் எல்லா இடங்களுக்கும் சென்று வந்துவிடுவது நல்லது. அதன் உண்மையான தன்மை அழிவதற்க்குள் சென்றுவந்துவிடுவது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 7, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
         மதுரைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று அருகில் இருக்கும் திருஅண்ணாமலை என்ற ஊரில் இருக்கும் நரிபாறை என்ற இடத்தில் இருக்கும் சித்தர்களை தரிசனம் செய்துவிட்டு வந்தேன். இந்த இடத்திற்க்கு நான் பலமுறை சென்று இருந்தாலும் நமது நண்பரை அழைத்துக்கொண்டு சென்றது நல்ல மகிழ்வாக இருந்தது. மதுரையில் இருந்து தஞ்சாவூருக்கு நேற்று மாலை வந்துவிட்டேன். 

பல ஊர்களுக்கு பயணம் செய்வதாலும் சொந்த வேலை காரணமாகவும் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை இனி தொடர்ந்து பார்க்கலாம். ஒவ்வொரு ஊரில் இருக்கும் நண்பர்களை அழைத்துக்கொண்டு ஏதாவது ஒரு கோவில் அல்லது சுற்றுலா தளங்களை தரிசனம் செய்துவிட்டு வருவது தற்பொழுது அதிகமாக வைத்திருக்கிறேன்.

என்னை சந்தித்து உதவி கேட்கும் நண்பர்களுக்கு அம்மனை வைத்து ஏதாவது உதவி செய்வது உண்டு. வரும் நண்பர்கள் அனைவருக்கும் வாய்ப்பு தருகிறேன். வாய்ப்பை தவறவிட்டால் நான் பொறுப்பு அல்ல.

என்னிடம் இருப்பதை செய்வதற்க்கு தான் நான் இருக்கிறேன். நண்பர்கள் நிறைய பேர் வருகின்றனர். வருகின்ற நண்பர்கள் அனைத்தையும் இலவசமாகவே கேட்பது தவறான ஒன்று. கொஞ்சம் உங்களை மாற்றிக்கொண்டு என்னை தேடி வாருங்கள். நல்ல முன்னேற்றம் காணலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 5, 2015

உடற்பயிற்சி


வணக்கம்!
          ஒவ்வொரு ஊருக்கும் நண்பர்களை சந்திக்க செல்லும்பொழுது அந்த நண்பர்களை அழைத்துக்கொண்டு கோவில் மற்றும் மலைபிரதேசங்களுக்கு செல்வது உண்டு.

ஒரு சில இடங்களில் நம்முடைய நண்பர்கள் நடப்பதற்க்கு கஷ்டப்படுவார்கள். உடற்பயிற்சி இல்லாத காரணத்தால் நடப்பதற்க்கே கஷ்டப்படுகிறார்கள். இதனை பார்த்துவிட்டு ஒவ்வொருவரிடமும் நான் நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள் என்று சொல்லுவேன்.

உணவு விடுதிகளில் வாங்கி சாப்பிடும் உணவு நமது உடலை கெடுத்துவிடுகிறது. நான் பத்து வருடங்கள் உணவு விடுதியில் சாப்பிட்டேன். கடந்த ஆறு மாதங்கள் வீட்டில் சாப்பிட்டவுடன் உடல் பருமன் ஏற்பட்டது. அதனை குறைப்பதற்க்கு தற்பொழுது பயிற்சி செய்து வருகிறேன். 

கெட்ட உணவை சாப்பிட்டு சாப்பிட்டு நல்ல உணவை உடல் ஏற்றுக்கொள்ளமாட்டேன்கிறது. பல நண்பர்களுக்கு இதே பிரச்சினை தான். கடையில் வாங்கி சாப்பிடும் உணவால் உடல் பருமன் ஏற்பட்டு பிரச்சினை ஏற்படுகிறது. இதனை தவிர்த்துவிடுங்கள். முடிந்தவரை வீட்டு சாப்பாட்டை சாப்பிடுங்கள். தவிர்க்கமுடியாத நேரத்தில் மட்டும் கடை உணவை சாப்பிடுங்கள்.

உடலுக்கு தினமும் பயிற்சி கொடுங்கள். நல்ல முறையில் உடல் பயிற்சி செய்யுங்கள். உடலை உங்களின் சொல்பேச்சில் வைத்திருங்கள்.

இன்று மதுரையில் இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு