Followers

Thursday, April 2, 2015

குரு தரும் யோகம்


வணக்கம்!
          இன்று அடுத்த பதிவு தரவேண்டும் அது எதனைப்பற்றி இருக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டு இருக்கும்பொழுது நண்பர் ஒருவர் எனக்கு போன் செய்து சார் நான் பங்குவர்த்தகம் செய்யலாமா என்று கேட்டார். சரி அம்மன் அவர் வழியாக ஒன்றைப்பற்றி சொல்லுகிறது என்று எழுத ஆரம்பித்துவிட்டேன்.

தொழில் செய்வதற்க்கு அந்த நண்பர் கடந்த சில நாட்களாக தொடர்புக்கொண்டு அவருக்கு நான் செய்துக்கொடுத்து வருகிறேன். ஒரு சாமியாரிடம் சென்றவுடனே நமக்கு லக் அடித்துவிடும் என்று பல மக்கள் கருதுவதால் இப்படி அனைவருக்கும் நினைப்பு வருகிறது. 

குரு கிரகம் நமக்கு முன்ஜென்மத்தில் நாம் செய்த நல்ல விசயங்களை எடுத்து ஒரு லக் கொடுக்கிறது. குரு கிரகம் பங்குவர்த்தகத்திற்க்கு காரகம் வகிக்கிறது அதனால் நாம் பங்குவர்த்தகத்தில் ஈடுபடலாம் என்று நினைக்ககூடாது. அது எந்த வாய்ப்பு என்பது யாருக்கும் தெரியாது. ஏதாவது ஒரு நல்லது நடக்கும் என்று இருக்கவேண்டும்.

என்னிடம் வருபவர்களிடம் கூட நான் குரு கிரகத்தை வைத்து தான் அவர்களுக்கு வாய்ப்பு தருகிறேன். அவர்களின் புண்ணியம் தான் அவர்களை வாழவைக்கிறது. என்ன என்றால் அதற்கு நான் பணம் வாங்கிவிடுவேன். 

சோதிடத்தைப்பற்றி உங்களுக்கு நல்ல தெரியும் எந்த கிரகம் கொடுத்தாலும் அது போய்விடும். சனிக்கிரகம் கொடுத்தால் அது யாராலும் எடுக்கமுடியாது. நான் குரு கிரகத்தை வைத்து தான் கொடுப்பேன். குரு கிரகத்தை வைத்து கொடுத்துவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பேன். அவர்கள் சரியாக செய்யவில்லை என்றால் எளிதில் எடுத்துவிடுவேன். குரு ஒருவருக்கு லட்சம் கோடி கொடுத்தாலும் எளிதில் அவரிடம் இருந்து பிடிங்கி சாப்பாட்டிற்க்கு வழி  இல்லை என்பது போல் செய்துவிடலாம்.

குரு கிரகம் என்றால் நமக்கு லக் அடிக்கும் என்று நினைத்துக்கொண்டு பங்குவர்த்தகத்தில் ஈடுபடவேண்டாம். யோகம் வருவது ஏதாவது ஒரு வழியாக இருக்கலாம்.

விரைவில் மதுரையில் என்னை சந்திக்கலாம்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: