Followers

Monday, April 13, 2015

நல்ல காலம்


வணக்கம்!
          நாளை தமிழ்வருடபிறப்பு நமது ஜாதககதம்பம் தொடங்கப்பட்ட நாள். நாளை தமிழ்வருடபிறப்பு மன்மத வருடம் பிறக்கிறது. அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று இன்றே நான் பிராத்தனை செய்துக்கொள்கிறேன். இன்று ஏன் பிராத்தனை செய்கிறேன் என்றால் இன்று திருவோண நட்சத்திரம் என்பதால் பிராத்தனை செய்கிறேன்.

சூரியன் நாளை மேஷத்தில் உச்சம் பெறபோகிறார். சிம்ம ராசிக்கு இந்த  காலம் பொற்காலம் என்றே சொல்லலாம்.சிம்ம ராசிக்காரர்கள் நல்லமுறையில் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்களின் ராசி நாதன் உச்சம்பெறும் காலம் பொற்காலமாக அமையும். ஒரு சில ராசிநாதன் ஒரு மாதக்காலம் மட்டும் உச்சம்பெறும் அதன் பிறகு கிரகம் மாறிவிடும். சனிக்கிரகம் குறைந்தது இரண்டரை வருடகாலம் உச்சம்பெற்று அந்த ராசிக்காரரை அதாவது மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மையை தரும்.

குரு கிரகம் என்றால் ஒரு வருடக்காலம் உச்சம் பெற்று நல்லது செய்யும். ராசிநாதன் உச்சம்பெறும்பொழுது நமது நடவடிக்கை எல்லாம் துரிதப்படுத்தி செயல்படவேண்டும். ராசிநாதன் உச்சம்பெற்றுவிட்டார் அவரே நல்லது செய்வார் என்று உட்கார்ந்து இருக்ககூடாது.நாம் இதுவரை எந்த காரியத்தை எல்லாம் செய்யவேண்டும் என்று நினைத்து இருந்தமோ அந்த காரியத்தை எல்லாம் செயல்படுத்தும்பொழுது நமக்கு வெற்றி கிடைக்கும்.

வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை என்று சொல்லும் ஆட்கள் எல்லோருக்கும் ஒரு செட்டில்மெண்ட்டை கொடுப்பது உங்களின் ராசிநாதன் உச்சம்பெறும் காலத்தில் அதிகம் நடைபெறும்.

நான் ஆன்மீக வேலை செய்யும் நண்பர்கள் எல்லாேருரிடத்திலும் சொல்லும் சொல் கிரகம் நமக்காக காத்துக்கொண்டிருக்காது நாம் தான் கிரகத்திற்க்கு காத்துக்கொண்டிருக்கவேண்டும். தற்பொழுது நல்ல நேரம் உனக்கு என்றால் அவசரமாக வேலை செய் என்பேன். கிரகங்கள் நல்லது செய்யும்பொழுது நாம் விழித்துக்கொள்ளவேண்டும்.

உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் எப்பொழுது நல்லது செய்யும் என்று தெரிந்து வைத்துக்கொண்டு செயல்பட்டால் நல்ல வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: