Followers

Thursday, April 2, 2015

செல்வ வளம்


வணக்கம்!
          நாம் எத்தனையோ பதிவில் செல்வவளத்தைப்பற்றி சொல்லியிருக்கிறேன்.அதில் ஒன்றை சொல்ல தவறவிட்டேன். அதனைப்பற்றி பார்க்க தான் இந்த பதிவு.

ஒவ்வொரு வீட்டிலும் வரவேற்பு அறையில் டிவி வைத்து அலங்கரிப்பார்கள். டிவி வைத்து அலங்கரிப்பது தவறு இல்லை. அதில் வரும் படங்களில் அல்லது சீரியலில் அழும் காட்சி வந்தால் டிவியை ஆப் செய்துவிடுங்கள்.

நேற்று காலை ஒரு வீட்டிற்க்கு என்னை அழைத்துசென்றார்கள் அந்த வீட்டிற்க்கு செல்லும்பொழுது காலை ஒன்பது மணி. அந்த நேரத்தில் அந்த வீட்டில் சீரியல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் போகும் நேரத்தில் அந்த டிவியில் இருந்து அழும் சப்தம் வந்துக்கொண்டு இருக்கிறது.

வறுமையில் இருக்கும் வீட்டிற்க்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று நான் செல்லும்பொழுது அங்கு இருந்து வரும் இந்த சப்தம் என்னை அவர்களுக்கு செய்யாதே என்பது  போலவே இருந்தது.

என்னை பொறுத்தவரை நன்றாக பார்த்து தான் செய்வேன். இப்படிப்பட்ட இடையூறு வரும்பொழுது எந்த ஒரு ஆன்மீகவாதியும் எந்த நல்லதையும் செய்யமாட்டான். வரும் கடவுளும் உங்களுக்கு நல்லது செய்யாது. இதனை தவிர்த்தாலே போதும் உங்களுக்கு செல்லவளம் வந்து சேரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

T.V thodarkal anaithum alugai mayamthan.namma thaaikulangal thirunthuvaarkala?