Followers

Monday, April 20, 2015

போலியான யோகம்


வணக்கம்!
          கிராம பகுதிகளில் சோதிடம் பார்க்கும்பொழுது ஒரு சில சோதிடர்கள் ஒரு சில இளைஞர்களிடம் உன்னுடைய ஜாதகத்தில் மிகப்பெரிய யோகம் இருக்கின்றது. திடீர் என்று வரும் இந்த ஜாதகத்தை யாரிடமும் காட்டிவிடாதீர்கள் என்று சொல்லிவிடுவார்கள்.

அவனும் அந்த ஜாதகத்தை யாரிடமும் காட்டாமல் வைத்திருப்பான். அப்படி என்ன பெரிய யோகம் அந்த ஜாதகத்தில் இருக்கின்றது என்று பிடிவாதம் பிடித்து அதனை வாங்கி பார்த்தால் அந்த ஜாதகம் மிகப்பெரிய அளவில் அடிவாங்கிய ஜாதகமாக இருக்கும்.

நகர்புறத்தில் உள்ளவர்களிடம் கூட இப்படிப்பட்ட நபர்களை நாம் காணமுடியும். சோதிடர்கள் அந்த நேரத்தில் காசு பார்ப்பதற்க்கு ஏதாவது சொல்லிவிடுவது உண்டு. அதே நேரத்தில் நாம் பார்த்த ஜாதக பலன் நடைபெறாமல் போகலாம் இதனை அடுத்த சோதிடர்கள் கண்டுபிடித்து சொல்லிவிடுவார்கள் என்று இப்படி சொல்லிவிடுவதும் உண்டு.

சோதிடர்கள் இப்படி என்றால் குறி பார்ப்பவர்கள் உங்களிடம் ஒரு அம்மன் இருக்கின்றது என்று சொல்லிவிடுவதும் உண்டு. சும்மா இருப்பவனிடம் அம்மன் இருக்கின்றது என்றால் சும்மா இருப்பானா பணத்தை குறிப்பார்ப்பவனிடம் கொட்டமாட்டானா?

நமக்கு வரும் எந்த யோகத்தையும் எந்த சோதிடனும் எடுத்துக்கொள்ளமுடியாது. உனக்கு வரும் யோகம் உனக்குதான் சொந்தம் அதனை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. பெரிய ஆட்களின் ஜாதகம் எல்லாம் லட்சம் பேர் ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் அவர்களின் யோகத்தை தடுத்து நிறுத்திவிடலாம் அல்லவா. அதே நேரத்தில் உங்களிடம் அம்மன் இருக்கின்றது என்று சொல்லுவதும் இதே மாதிரியான ஒரு வியாபாரம் தான். 

இதனை எல்லாம் நீங்கள் நம்பாமல் உங்களின் ஜாதகத்தை நல்ல சோதிடர்களிடம் காண்பித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: