Followers

Wednesday, April 22, 2015

திருவிழா


வணக்கம்! 
          நான் அடுத்தவருக்கு ஆன்மீகப்பணி செய்வதை விட என்னை மேம்படுத்திக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவது உண்டு. சொந்த விசயத்திற்க்கு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்வது உண்டு. 

தனிப்பட்ட நபர்கள் கூப்பிட்டால் அவர்களின் தேவைக்காக ஆன்மீக பயணம் செய்வேன். என்னுடைய தேவைக்கு தனியாக பல கோவிலுக்கு நானே அலைந்து கொண்டிருப்பேன். 

தற்பொழுது தென்தமிழகம் எங்கும் நிறைய கோவிலில் திருவிழாக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனக்கு தெரிந்த கோவிலுக்கு எல்லாம் சென்றுக்கொண்டு இருக்கிறேன். பல கோவிலுக்கு சென்று முடித்துவிட்டேன். இனியும் செல்லவேண்டும்.

தேர் திருவிழா நடந்தால் அந்த கோவிலுக்கு சென்று தேரை வடம் பிடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். தேர் நிலைக்கு வரும் வரை இழுப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. எனக்கு பிடித்தமான ஒன்றை உங்களுக்கும் பிடித்தது என்றால் நீங்களும் சென்று கலந்துக்கொள்ளுங்கள்.

தெய்வத்தை வைத்து நாம் சுமப்பது அல்லது இழுப்பது நமக்கு எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்று நினைத்துக்கொண்டு செயல்பட்டால் இதன் மீது விருப்பம் வந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: