Followers

Tuesday, April 28, 2015

கல்வி தானம்


வணக்கம்!
          அந்தந்த நேரத்தில் உதவி செய்யவே நமக்கு கடவுள் பல சந்தர்ப்பத்தை வைத்திருப்பார். அந்த நேரத்தை நாம் சரியாகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தற்பொழுது பள்ளிக்கு விடுமுறை காலம் இருக்கின்றது. அடுத்த வருட கல்விக்காக ரிசல்ட்டை எதிர்நோக்கி இருப்பார்கள். இதில் ஏழை குழந்தைகளாக இருந்தால் ரிசல்ட்டை எதிர்நோக்கத்தோடு படிப்பு செலவுக்கு என்ன செய்வது என்று பல குழப்பத்தில் இருப்பார்கள்.

நாம் படிக்காத படிப்பை இப்படிப்பட்ட குழந்தைகளாவது படிக்கவேண்டும் என்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள். நம்மிடம் அந்தளவுக்கு பணம் இல்லை என்று நினைக்காமல் இருக்கின்ற பணத்தை மனநிறைவோடு அவர்களிடம் கொடுக்கும்பொழுது அவர்களின் கல்விக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்து இருக்கிறோம் என்ற மனதிருப்தி ஏற்படும்.

நல்ல பணவசதி இருந்தால் முழு செலவையும் ஒருவருக்காவது ஏற்றுக்கொள்ளுங்கள். தற்பொழுதே அதற்கு தயார் செய்துவிட்டால் அவர்களின் கல்வி ஆரம்பிக்கும்பொழுதே நாம் உதவி செய்தது போல் ஆகிவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: