Followers

Friday, April 3, 2015

சந்திரகிரகணம்


வணக்கம் !
          இன்று காலையில் பங்குனி உத்திரத்தைப்பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து இருந்தேன். நெட் பிரச்சினையால் அதனை எழுதமுடியவில்லை. தற்பொழுது நாளை ஒன்றை செய்வதைப்பற்றி பார்க்கலாம்

நாளைய தினம் சந்திரகிரகணம் ஏற்படுகிறது. மாலை 3 : 45 மணி முதல்  7 :15 மணி வரை சந்திரகிரகணம் ஏற்படுகிறது. நீங்கள் மந்திரப்பயிற்சி பெற்று வந்தால் அந்த நேரத்தில் நீங்கள் மந்திர ஜெபம் செய்யலாம்.

சாதாரணமானவர்கள் என்றால் அந்த நேரத்தில் தர்ப்பை புல்லை கையில் வைத்திருக்கலாம். சந்திரகிரகணம் ஏற்படும்பொழுது அது உங்களுக்கு பிரச்சினையை தரும் என்று நினைப்பவர்கள் தர்ப்பை பையை கையில் வைத்திருக்கலாம்.

நாளை சந்திரகிரகணம் ஏற்படும்பொழுது வக்கிர சக்தியுடைய கோவில்கள் மட்டும் திறந்த வைத்திருப்பார்கள். அந்த கோவில்களில் நீங்கள் வழிபாடு செய்யலாம். அந்த சக்தியின் முழுமையான சக்தியை நாளை பெறமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: