Followers

Thursday, April 16, 2015

பிரதோஷம்


வணக்கம்!
          இன்று பிரதோஷம். பிரதோஷம் அன்று நான் சிவபூஜை செய்ய சொல்லிருந்தேன். இதனை எத்தனை பேர் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. 

ஒரு முறை நான் குருவிடம் ஏன் இத்தனை பேர் நாட்டில் இருக்கும்பொழுது என்னிடம் வந்து இதனை கொடுத்தீர்கள் என்று கேட்டேன்.அவர் என்னிடம் முதலில் கொடுத்த மந்திரத்தை இன்று வரை நீ செய்துக்கொண்டிருக்கிறாய் அல்லவா அந்த தொடர்ச்சியான கடமையை செய்பவனுக்கு தான் கொடுக்கவேண்டும் என்பது பிரபஞ்ச விதி அதனால் தான் உன்னிடம் வந்துள்ளது என்றார்.

பல நாட்கள் ஒரு வழிப்பாட்டை செய்து வரும்பொழுது அது உங்களை உயர்த்தும். இன்று பிரதோஷ வழிபாடு நீங்கள் பிரதோஷ வழிப்பாட்டை செய்யுங்கள். அபிஷேகத்திற்க்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுங்கள்.

நாளை மதியம் கோயம்புத்தூர் பயணம். இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கியிருப்பேன்.சந்திக்க விருப்பம் இருப்பவர் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். ஒய்வு நேரத்தில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: