Followers

Monday, April 13, 2015

நன்றி


வணக்கம்!
         ஜாதககதம்பம் எழுத ஆரம்பித்து ஐந்து வருடங்கள் முடிவடைந்த நிலையில் பல நல்ல விசயங்களை நான் நினைவுப்படுத்தி பார்க்கிறேன்.

ஜாதககதம்பம் வழியாக எனக்கு மிகப்பெரிய வட்டாரம் உருவாகியுள்ளது. இவர்கள் எல்லாம் என்னை சந்திப்பார்களாக என்று சொல்லும் மிகப்பெரிய ஆட்கள் கூட என்னை வந்து சந்தித்து சென்று இருக்கிறார்கள். இன்றைய தேதிக்கு மிகவும் பிஸியாக இருப்பதற்க்கும் ஜாதககதம்பம் வழியாக வந்த நண்பர்கள் தான் காரணம் என்று சொல்லமுடியும்.

ஆன்மீகப்பயிற்ச்சிக்கு அதுவும் மிகவும் சவாலான ஆன்மீகப்பயிற்சி எல்லாம் ஜாதககதம்பம் வழியாக வந்த நண்பர்களாக தான் நான் மேற்க்கொண்டு இருக்கிறேன்.

பல நண்பர்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தி எழுத வைத்து இருக்கிறார்கள். என்னைப்போல் பதிவு எழுதும் நண்பர்கள் அவர்களின் பதிவுகளில் ஜாதககதம்பத்தைப்பற்றி சொல்லி எனக்கு பல நண்பர்களை பெற்றும் தந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் மனமார நன்றி சொல்லுகிறேன்.

மனித வாழ்க்கையில் உதவுபவனை மறக்கும் உலகம் இந்த கலியுகம். இக்கட்டான நேரத்தில் நமக்கு உதவுபவன் மனிதனாக இருக்கமுடியாது அவர்கள் கடவுளாக தான் இருப்பார்கள் என்பதை இந்த உலகம் எனக்கு பலமுறை செய்துக்காட்டி இருக்கிறது. ஜாதககதம்பம் வழியாக என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு உதவியவர்கள் இருக்கிறார்கள். அந்த நண்பர்களை நான் பதிவில் சொல்லியே ஆகவேண்டும். 

இப்படிப்பட்ட உதபவர்களை நாம் மறந்துவிடுவோம் ஆனால் நான் மறக்கவில்லை அவர்களை நான் சொல்லியே ஆகவேண்டும் என்பதற்க்காக தான் அவர்களின் பெயரை பதிவில் சொல்லுகிறேன்.

சிங்கபூரை சேர்ந்த திரு செந்தில்குமார் அவர்கள்.
சேலத்தை சேர்ந்த திரு சிவக்குமார் அவர்கள்.
ராசிப்புரத்தை சேர்ந்த திரு ராஜ்குமார் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு தமிழ்செல்வன் அவர்கள்.
திருப்பூரை சேர்ந்த ஒரு பெண்மணி.
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

இவர்கள் பதிவு வழியாக வந்து என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு உதவியவர்கள் இவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

பல விசயங்களில் பல்வேறு நண்பர்கள் எனக்கு நேர்முகமாகவும் மறைமுகமாவும் எனக்கு உதவி இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய தனிப்பட்ட நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

3 comments:

nallur parames said...

Om sakthi

Unknown said...

All the very best. Keep doing the good work. Lots of people require your advice and guidance. Reading this blog gives good spirit for people like us.
-Surya

Unknown said...

Dear Sir,

All the best for your future. I believe and always try my level best to help peoples if really i can.

"The best feeling of happiness is when you're happy because you've made someone else happy"

V.Senthil
Singapore