Followers

Friday, April 17, 2015

நம்பினால் நம்புங்கள்


வணக்கம்!
         நம்பினால் நம்புங்கள் எழுதி நீண்ட நாட்களாவிட்டது. நம்மை தேடி வரும் நண்பர்களுக்கு அவர்களின் ஜாதகத்தை வைத்து குரு ஏழில் இருந்து கோச்சாரப்பலனை தந்தால் எப்படி பலன் வருமோ அது போல் தான் பலன் தருவது உண்டு.

ஒவ்வொரு ராசிக்கும் குருக்கிரகம் ஏழாவது வீட்டிற்க்கு வரும்பொழுது நல்ல பலனை கொடுக்கும். அதேப்போல் தான் பலனை கொடுக்கிறேன். 

ஒவ்வொருவருக்கும் இப்பொழுது பலனை கொடுப்பதில் அம்மனை வைத்து மிகப்பெரிய அளவில் நடத்திக்கொடுக்கிறேன். வரும் நபர்கள் திக்குமுக்காடி போகும் அளவிற்க்கு கொடுக்கிறேன். அம்மன் என்றால் என்ன என்று காட்டிக்கொடுக்கிறேன்.

சித்தர்களைப்பற்றியும் அவர்கள் செய்த சித்து விளையாட்டுக்களையும் உங்களுக்கு நன்கு தெரியும். அதில் சித்தர்கள் பறக்கிறார்கள் என்று கேள்விபட்டு இருப்போம். ஒரு மனிதன் பூமியை விட்டு மேல் எழும்பி பறக்கமுடியும். வெளியில் இதனை நிருப்பிப்பது கடினம்.ஆன்மீக சாதனை செய்பவர்கள் தொடர் முயற்சியால் இதனை செய்யமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: