Followers

Wednesday, April 15, 2015

முருகனும் நிலமும்


வணக்கம்!
          நிறைய செவ்வாய் கிரகம் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று வந்தேன். அதாவது செவ்வாய் கிரகத்திற்க்கு உரிய தேவதையான முருகனின் கோவிலுக்கு சென்று வந்தேன். தனிப்பட்ட முறையில் முருகனுக்கு நிறைய பூஜைகள் செய்தேன்.

நிலம் சம்பந்தப்பட்ட விசயத்தில் மட்டும் நான் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தேன். அதனை நான் பலமுறை பதிவில் சொல்லிருக்கிறேன். ஏன் அதற்குள் நான் செல்லவில்லை என்றால் நிலம் சம்பந்தப்பட்ட விசயங்களை செய்யும்பொழுது செவ்வாய் கிரகம் மற்றும் அதனை சம்பந்தப்பட்ட தெய்வங்கள் எல்லாம் மிகவும் அபாயகரமான தெய்வங்கள். அவர்களை வைத்து வேலை செய்வதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.

முருகனை வணங்கியதால் எனக்கு நிலம் சம்பந்தப்பட்ட தொழில் தேடிவந்தன. சரி வந்ததை செய்வோம் என்று செய்து அதில் வெற்றியும் கண்டுவிட்டேன். இதில் பல வெற்றிகளை நான் ஏற்கனவே பார்த்து இருந்தாலும் தொழிலாக நான் செய்யாமல் இருந்தேன். முதன் முதலில் இதனை தொழிலுக்கு இப்பொழுது தான் செய்தேன்.

நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ள சிக்கல் அதாவது ஆன்மீக சிக்கல் என்ன என்றால் சம்பந்தப்பட்ட நிலம் கோவிலுக்கு சொந்தமாக இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு ஆன்மீகவாதிக்கு சொந்தமாக இருக்கலாம். ஒரு சில இடத்தில் துர் ஆத்மாக்கள் அல்லது துர் தேவதைகள் இருக்கும் இடமாக இருக்கின்றது இதனை நாம் பார்த்து தான் செய்யவேண்டியுள்ளது. இப்படிப்பட்ட இடங்களை நாம் தேர்வு செய்யும்பொழுது அந்த தொழில் உங்களை கவிழ்த்துவிடும்.

நீங்கள் நிலம் மற்றும் வீடு கட்டும் தொழிலில் இருந்தால் முருகனுக்கு என்று நிறைய செய்யுங்கள். நிலம் மற்றும் கட்டிடம் கட்டும் தொழிலில் இருந்தால் அதில் பணம் நிறைய வரும். அந்த பணத்திற்க்கு தகுந்தவாறு முருகனுக்கு நீங்கள் நிறைய செய்யவேண்டும். அப்படி செய்து வந்தால் உங்களின் தொழிலை முருகன் மிகப்பெரிய அளவில் விரிவு செய்து தருவார்.

நிலம் சம்பந்தப்பட்ட தொழிலுக்கு ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து செய்துக்கொடுத்து வருகிறேன். அதனை பார்த்துவிட்டு விரைவில் பதிவில் அறிவிப்பை தருகிறேன் அப்பொழுது புதிய நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு உங்களின் வெற்றிக்கு வழி செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: