Followers

Tuesday, June 2, 2015

இனிய தொடக்கம்


வணக்கம்!
          கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் இருந்து இன்று காலை தஞ்சாவூர் வந்து சேர்ந்துவிட்டேன். இரண்டு நாட்களும் முடிந்த வரை நண்பர்களை சந்தித்தேன். சந்தித்த அனைவரும் நீண்ட கால நண்பர்கள். புதிய நண்பர்கள் என்னை சந்திக்க வாய்ப்பு கேட்டார்கள். நான் அவர்களை எல்லாம் சந்திக்கவில்லை.

பழைய நண்பர்கள் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு வழிபாட்டை செய்து வருபவர்கள் எல்லாம் இன்று நல்ல நிலைமையில் இருக்கின்றனர். அதுவே மிகப்பெரிய சந்தோஷம். எந்த ஒரு காரியத்தையும் தொடர்ச்சியாக செய்து வரும்பொழுது மட்டுமே நல்லது நடக்கும்.

புதிய நண்பர்களை எல்லாம் சந்திக்கும் நிலையில் தற்பொழுது இல்லை என்றே சொல்லும் அளவுக்கு பழைய நண்பர்களின் அழைப்பு இருக்கின்றது. மேலும் மேலும் வழிகாட்டுதலுக்காக பழைய நண்பர்கள் அழைக்கின்றனர். என்னால் முடிந்தளவுக்கு அவர்களுக்கு உதவுகிறேன்.

உங்களுக்கும் சொல்லுவது இது தான். தொடர்ச்சியாக தொடர்பை என்னிடம் வைத்திருக்குங்கள் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை தொட்டுவிடலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: