Followers

Wednesday, June 17, 2015

சக்தி


வணக்கம்!
          இன்றைய காலத்தில் தெருவுக்கு தெரு ஆன்மீக பயிற்சி இடம் இருக்கின்றது. அப்படி இருந்தும் பல நண்பர்கள் நல்ல ஆன்மீகப்பயிற்சி எடுக்க எது சிறந்த இடம் என்று என்னிடம் கேட்டுள்ளனர்.

ஆன்மீகத்தை கற்று தரும் இடம் அனைத்திலும் ஒரே மாதிரியான யோகம் தியானத்தைதான் சொல்லி தருவார்கள். கற்று தரும் குருவின் சக்தியை பொறுத்து தான் நாம் சக்தியை பெறுவது அமையும். குருவிடம் நல்ல சக்தி இருந்தால் நாம் எந்த யோகம் தியானம் கற்காமல் கூட நம்மை நல்ல சக்தி படைத்தவர்களாக மாற்றிவிடுவார்கள்.

நல்ல சக்தி படைத்தவர்களின் பார்வை நம்மீது பட்டாலே போதும் அதுவே நமக்கு பெரிய புண்ணியமாக போய்விடும். அப்படிப்பட்ட சக்தி படைத்தவர்கள் வெளியில் அதிகம் வருவது கிடையாது. நாம் தான் அவர்களை தேடிச்செல்வ வேண்டும்.

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் யோக தியானம் பழகுங்கள். அதனை கற்கும்பொழுது சக்தி படைத்தவர்களிடம் சென்று கொஞ்சம் நேரம் அமர்ந்துவிட்டு வாருங்கள். உங்களின் சக்தியை மேம்படுத்திக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: