Followers

Wednesday, June 3, 2015

வழிகாட்டி


வணக்கம்!
          இன்றைய காலத்தில் ஒருவருக்கு திருமணம் ஆவதே மிகப்பெரிய விசயமாக இருக்கின்றது. பல பேர்களுக்கு திருமணம் நடைபெறாமல் போகின்றது. அப்படியே திருமணம் ஆனாலும் குழந்தை பிறப்பது அதைவிட போராட்டமாக இருக்கின்றது. குரு கருணை காட்ட மாட்டேன்கிறார்.

ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் குரு கிரகம் நன்றாக இருக்கவேண்டும். குரு கிரகம் நன்றாக இருந்தால் ஒருவருக்கு நல்லது எல்லாம் உடனே நடைபெற்றுவிடும். முக்கால்வாசி பேருக்கு குரு கிரகம் நன்றாக ஜாதகத்தில் அமையாது.

குரு கிரகம் நமக்கு சரியில்லை என்று வைத்துக்கொள்வோம் எதிராளி சுக்கிரன் கிரகமும் நன்றாக இருக்கின்றதா என்று பார்க்கவும். அவரும் பல பேர்க்கு நல்லது செய்வதில்லை.அவரும் ஜாதகத்தில் நன்றாக அமைய மாட்டேன்கிறார். இரண்டு வழி தான் இருக்கின்றது இரண்டும் அடைபடும்பொழுது என்ன செய்வது?

ஒரு வழிகாட்டியை அமைத்துக்கொள்வது நல்லது. அவரின் வழிப்படி நாம் செயல்படும்பொழுது நமக்கு நல்ல வாழ்வு அமையும். இதில் என்ன சிக்கல் என்றால் வழிகாட்டியை பகைத்துக்கொள்ளும் நேரமும் வரும். இரண்டு கிரகங்களும் பாதிக்கும்பொழுது வழிகாட்டியின் மீது சந்தேகம் வரும். நீங்கள் பொறுமையாக இருந்து சந்தேகம் கொள்ளாமல் சகித்துக்கொண்டு வழிகாட்டுதலை மேற்க்கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: