Followers

Saturday, June 27, 2015

குழந்தை பாக்கியம்


வணக்கம்!
          இன்றைய காலத்தில் பத்து பேருக்கு திருமணம் நடைபெற்றால் அதில் மூன்று நபருக்கு தான் இயற்கையாகவே குழந்தை பாக்கியம் பிறக்கிறது. மீதியுள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது மருத்துவர்களால் உருவாக்கப்படுகிறது என்றே சொல்லலாம்.

ஒவ்வொரு நாளும் ஒரு மெயிலாவது எனக்கு வரும் எனக்கு குழந்தை இல்லை சார் ஏதாவது பூஜை செய்து தாருங்கள் என்று கேட்பார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் நிலை மிகவும் கஷ்டமானது என்று எனக்கு நன்றாக தெரியும். அதே நேரத்தில் இந்த வேலைக்கு மட்டும் அதிகம் சிரத்தையோடு பூஜை தொடர்ந்து செய்யவேண்டும்.

ஒருவருக்கு குழந்தை பாக்கியத்தை தரும் வீடாக சோதிடத்தில் பூர்வபுண்ணிய வீட்டை வைத்திருக்கிறார்கள் என்றால் குழந்தை பாக்கியத்திற்க்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள் என்று பாருங்கள். குழந்தை பாக்கியத்தைப்பற்றி பழைய பதிவில் நிறைய எழுதியுள்ளேன்.  மேலும் எழுதவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

ஒருவருக்கு திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் குழந்தை இல்லை என்றால் தகுந்த வழிகாட்டுதலோடு பரிகாரத்தை செய்யுங்கள். அதோடு மருத்தவரையும் சந்தித்து மருத்துவ ஆலாேசனை பெற்ற சிகிச்சை எடுத்து வாருங்கள்.

எங்களிடம் திருமணம் முடிந்து ஆறு வருடத்திற்க்கு மேல் உள்ள தம்பதினர்க்கு மட்டும் தான் பூஜை செய்யவேண்டும் என்று குரு சொல்லுவார். எல்லா வழிகளையும் நீங்கள் மேற்க்கொண்டு அதில் வெற்றி பெறவில்லை என்றால் என்னை தொடர்புக்கொண்டு இதற்க்கான வழிமுறைகளை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: