Followers

Sunday, June 28, 2015

வாங்கி கட்டிய வரம்


வணக்கம்!
          வாங்கி கட்டிய வரம் என்ற தலைப்பில் ஒரு சில கருத்துக்களை பார்த்து வந்தோம். தற்பொழுது அதில் ஒன்றை எழுதவேண்டும் என்று நினைத்து அதனை தொடுகிறேன்.

பணம் சம்பாதிக்க பல வழிகளை மக்கள் பயன்படுத்தினாலும் அதில் பங்கு வர்த்தம் வழியாக பணம் சம்பாதிக்க நினைப்பவர்களும் உண்டு.பங்கு வர்த்தகத்தில் சம்பாதிப்பது தவறு இல்லை என்றாலும் இதில் ஈடுபட வைப்பவர்களை பற்றி தான் இந்த பதிவே.

மக்களை ஆசை காட்டி இதில் பணம் கட்டினால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று சொல்லி மக்களின் பணத்தை கட்ட வைத்துவிடுவார்கள். பணம் கட்டிய இரண்டு நாள் அல்லது அதிகபட்சம் ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் பணம் எல்லாம் போய்விடும். நஷ்டம் ஏற்பட்டவுடன் அதனைப்பற்றி கவலை படாமல் அந்த நிறுவனத்தை நடத்திக்கொண்டிருப்பவர்கள் தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பார்கள். பணம் போட்டவன் நிலை அந்தோ கதிதான்.

ஷேர் புரோகர்களின் வேலை அது தான் என்றாலும் அவர்களின் வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு செல்வது இல்லை. அவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கிறார்கள். அதில் இருந்து மீண்டு வருவதில்லை. பல பேர்களின் வாய்வழி தோஷம் அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுவிடுகிறது. அவர்கள் என்ன தான் வழிபாடு எல்லாம் செய்தாலும் அவர்களால் எந்த முன்னேற்றமும் ஆன்மீகவழியில் ஏற்பட செய்ய வைக்க முடிவதில்லை.

நம்ம பதிவுக்கு வரும் பல நண்பர்கள் இப்படி செய்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரளவு சம்பாதித்துவிட்டால் வேறு நல்ல தொழிலாக பார்த்து மாறிக்கொள்ளுங்கள்.உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்க்கும் அது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: