Followers

Tuesday, June 30, 2015

தொழில் வெற்றிக்கு


வணக்கம்!
          நாம் ஒவ்வொரு ஊரிலும் ஒரு சில கடைகளை பார்த்து இருப்போம். அந்த கடைகள் பல வருடங்களாக அந்த பகுதியில் மிகப்பெரிய பெயரை பெற்று எந்த நேரமும் வியாபாரம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

ஒருவருக்கு என்ன தான் தசா நாதன் எல்லாம் நன்றாக இருந்தாலும் அவருக்கு இடையில் வரும் கோச்சாரபலன்கள் அவர் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற வாழ்வில் ஒரு சில அடிகளை கொடுத்துவிடும். அவர் செய்துக்கொண்டு இருக்கின்ற வியாபாரத்தையும் விட்டுவைக்காது. 

ஒருவர் தொடர்ந்து நல்ல வியாபாரம் செய்துக்கொண்டு இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவரின் வியாபார வெற்றிக்கு ஒரு ஆன்மீகவாதி பின்புலமாக இருக்கிறார் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

ஆன்மீகவாதியின் கையில் தான் பெயர் பெற்று விளங்குகின்ற கடைகள் எல்லாம் இயங்கிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இதனை நம்பாமல் இருக்கலாம் ஆனால் இது தான் உண்மையான ஒரு நிகழ்வு.

ஆன்மீகவாதி செய்யும் பூஜையில் தான் இப்படிப்பட்ட வியாபாரம் செய்பவர்கள் தலைமுறை தலைமுறையாக செய்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் வியாபாரம் செய்ய  தொடங்கினால் கண்டிப்பாக ஒரு நல்ல ஆன்மிகவாதியை வைத்து பூஜை செய்துக்கொள்ளுங்கள்.

என்னை தேடிவந்த பலருக்கு தற்பொழுது தான் ஒவ்வொன்றாக செய்துக்கொடுத்து வந்துக்கொண்டு வருகிறேன். இது அனைத்தும் முன்கூட்டியே பணம் கட்டி செய்கின்றனர். அதோடு எங்களின் பங்குகளையும் கொடுத்துவிடவேண்டும் என்ற கட்டளையோடு செய்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: