Followers

Saturday, June 27, 2015

வீடு


வணக்கம்!
          நான் நண்பர்களை சந்திக்க அவர்களின் வீடுகளுக்கு செல்லும்பொழுது அந்த வீடுகளை பார்க்கும்பொழுது அவர்கள் எந்தளவுக்கு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது எனக்கு புரிந்துவிடும்.

ஒவ்வொரு மனிதர்களின் ஜாதகமும் போல் அவர்களின் வீடுகளும் நமக்கு ஜாதகம் போல் இருந்து ஒரு சில விசயங்களை எனக்கு சொல்லாமல் சொல்லுகிறது. அதனைப்பற்றி நான் பழைய பதிவில் எழுதியிருக்கிறேன். இந்த பதிவிலும் ஒன்றை சொல்லுகிறேன்.

உங்களின் வீடு சூரிய வெளிச்சம் உள்ளே வருவது போல் இருந்தால் மிக நன்றாக இருக்கும். பல வீடுகளில் பகலில் கூட மின் விளக்கை வைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். சூரிய வெளிச்சம் வீட்டிற்க்குள் வந்தால் உங்களுக்கும் உங்களின் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது.

வாடகை வீட்டில் நீங்கள் வாழ்ந்தால் கூட அப்படிப்பட்ட வீடுகளில் நீங்கள் வசிக்க வேண்டாம். அப்படிப்பட்ட வீடுகளில் நீங்கள் வசித்தால் உங்களின் வளர்ச்சி பாதிக்க செய்யும். அதே நேரத்தில் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் நல்லதை நோக்கி செல்லாது. இருக்கின்ற அனைத்து வியாதியும் உங்களுக்கு வரும். உலகத்தில் உள்ள பிரச்சினை அனைத்தையும் நீங்கள் சுமப்பது போன்ற நிலை ஏற்படும்.

நீங்கள் நன்றாக வாழவேண்டும் என்று நினைத்தால் இப்படிப்பட்ட வீடுகளை விட்டு நல்ல வீடாக சூரிய வெளிச்சம் உள்ளே வருவது போல் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வாழுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: