Followers

Wednesday, June 10, 2015

நண்பர்களுக்கு


வணக்கம்!
          நமது நண்பர்கள் எல்லாம் என்னை தொடர்புக்கொள்ளுவதற்க்கு வழி செய்தால் ஒவ்வொருவரும் வந்து புலம்புகிறார்கள். என்னிடம் பணமே இல்லை நான் என்ன செய்வது என்று சொல்லுகிறார்கள். என்னிடமும் பணம் இல்லை நான் என்ன செய்வது என்று திருப்பி தான் சொல்லமுடியும்.

நிறைய வழிபாட்டுமுறைகளை ஜாதககதம்பத்தில் சொல்லியுள்ளேன் அதனை பின்பற்றி வாருங்கள் அதில் இருந்து விடுபடலாம் என்று பல முறை சொல்லி இருக்கிறேன். அதனையும் செய்வதில்லை பிரச்சினை பிரச்சினை என்று சொன்னால் மட்டும் உடனே எப்படி விலகும்.

என்னிடம் ஒவ்வொரு பூஜைக்கும் குறைந்தது பத்தாயிரம் செலவு ஆகும். அதற்கு தான் நான் தொழில் செய்பவர்களை நாடி செல்லுகிறேன். நீங்கள் எந்த பிரச்சினைக்கும் குறைந்தது பத்தாயிரம் செலவு செய்யமுடியும் என்றால் தொடர்புக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் அவர் அவர்களே விடுபட பல பதிவுகளில் சொல்லியுள்ளேன். ஏதாவது ஒன்றை தொடர்ந்து விடாமல் செய்து வாருங்கள். நல்லது நடக்கும்.

நமது தொழில் செய்பவர்களிடம் CCTV கேமிரா வழியாக மொபைலில் கண்காணிக்க வழி செய்துக்கொடுங்கள் என்று சொல்லிருந்தேன். இதுவரை யாரும் அதற்கு ஏற்பாடு செய்த மாதிரி எனக்கு தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து இருந்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: