Followers

Wednesday, June 3, 2015

தொழில் செய்பவர்களுக்கு


வணக்கம்!
          ஒவ்வொரு கம்பெனிக்கும் நாம் நமது அம்மனை வைத்து நல்ல வியாபாரம் நடைபெற வழி செய்துக்கொடுக்கிறோம். இந்த வேலை படிப்படியாக தான் நடைபெறும். அந்த கம்பெனியில் என்ன நடைபெறுகிறது என்பதைப்பற்றி நான் அதிகம் கவனம் செலுத்தாமல் வந்தேன். நல்லது மட்டும் நடைபெற்றால் போதும் என்று நினைத்து இருந்தேன். அலுவல் சம்பந்தப்பட்ட விசயத்தில் தலையீடு செய்வதில்லை.

பல கம்பெனிகளை பார்க்கும்பொழுது அந்த கம்பெனியின் வேலையாட்கள் சரியில்லை என்று தெரிகிறது. வேலையாட்கள் நன்றாக வேலை செய்தால் மட்டுமே கம்பெனி வெற்றி பெறும்.

ஒவ்வொரு கம்பெனியும் தற்பொழுது கண்காணிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நமது பார்வையும் அந்த கம்பெனிக்கு இருக்கவேண்டும்.  அதே நேரத்தில் என்ன நடைபெறுகிறது என்று பார்க்கவேண்டும். அதற்கு CCTV கேமரா வழியாக மொபைலில் பார்த்துக்கொள்ளும் வசதி இருந்தால் நல்லது.

என்னிடம் இருக்கும் அனைத்து கம்பெனிகளும் உடனே இந்த வசதியை எனக்கு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்பதில்லை. எதிர்காலத்தில் இந்த வசதியை ஏற்படுத்திக்கொடுத்தலாம் பரவாயில்லை. கண்டிப்பாக எனக்கு இதனை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதில்லை இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

உங்களின் வளர்ச்சிக்கு நன்றாக துணைபுரியும் என்று நான் நம்புகிறேன்.செய்வதும் செய்யாமல் போவதும் உங்களின் விருப்பம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: