Followers

Friday, June 19, 2015

போட்டுக்கொடுத்த அம்மன்


வணக்கம்!
          அம்மன் எப்படி எல்லாம் வேலை செய்யும் என்பதற்க்கு இது நல்ல உதாரணமாக உங்களுக்கு இருக்கும். என்னை தேடி வரும் நண்பர்களிடம் சொல்லும் வார்த்தை நேர்மையாக இருங்கள் என்பது மட்டுமே. என்னை ஏமாற்ற பார்க்காதீர்கள் என்று அடிக்கடி சொல்லுவேன்.

ஒருவருக்கு அம்மனை வைத்து வேலை செய்துக்கொடுத்துக்கொண்டிருந்தேன். மாதம் மாதம் தவறாது ஹோமம் எல்லாம் செய்துக்கொடுத்துக்கொண்டிருந்தேன். அவரின் வளர்ச்சிக்கு ஒரு காரியம் ஒன்றை செய்துக்கொடுத்தேன். அதன் வழியாக ஒரு பெரிய வளர்ச்சிக்கு அது வித்திட்டது. அதில் இருந்து வந்த பணத்தில் இருந்து ஒரு பைசா கூட அவர் கொடுக்கவில்லை. 

நேற்று காலை எனக்கு மேலிடத்தில் இருந்து போன் வந்தது. நீ செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கும் நபரிடம் இருந்து பணம் வரவில்லை. அம்மன் என்னிடம் சொல்லிவிட்டது. மறுபடி மறுபடி அம்மனை அவருக்கு வேலை செய்ய சொல்லி தொந்தரவு செய்கிறாய் உடனே நிறுத்து என்று சொல்லிவிட்டார். 

மேலிட உத்தரவை நான் மதிக்கவேண்டும் அல்லவா. அதனால் சம்பந்தப்பட்ட நபரின் போனை நேற்று மதியத்தில் இருந்து எடுக்கவில்லை. நான் எதார்த்தமாக எல்லாேரிடமும் பழகுவேன். எனது மேலிடம் அப்படில்லை ஒழுங்காக இருந்தால் மட்டுமே செய்ய சொல்லுவார். 

எங்களை ஆன்மீக வேலைக்கு கூப்பிடும்பொழுதே சொல்லுவது பத்து சதவீதம் எங்களுக்கு தந்துவிடவேண்டும். பூஜைக்கு தனியாக செலவு செய்யவேண்டும் என்று சொல்லிவிடுவது உண்டு. அதனை மறந்துவிட்டு என்னை சாமார்த்தியமாக பேசி ஏமாற்றினால் அம்மனின் கோபத்திற்க்கு ஆளாகவேண்டியது தான். 

உங்களின் கர்மாவை எல்லாம் எடுத்து தான் உங்களுக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறேன். நீங்கள் அதனை மறந்துவிட்டு வாழ்ந்துவிடலாம் என்றால் உலகத்தின் கர்மாவை எல்லாம் சுமக்கவேண்டிய நிலை ஏற்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: