Followers

Thursday, June 4, 2015

செல்வவளம்


வணக்கம்!
          தற்பொழுது செல்வவளத்தைப்பற்றி எழுதுவதில்லை. ஒவ்வொருவரின் வீடுகளுக்கு செல்லும்பொழுது அவர்களிடம் நேரிடையாக சொல்லிவிடுவது உண்டு. இந்த பதிவில் பொதுவான ஒரு தகவலைப்பற்றி சொல்லுகிறேன்.

நீங்கள் சாப்பிடும் உணவு உங்களின் வாழ்க்கையில் பெரும்பங்கு அனைத்திற்க்கும் வகிக்கிறது. இந்த உணவு முறையில் சரியாக கடைபிடித்தாலே போதும் உங்களுக்கு செல்வவளமும் வரும் உங்களின் வாழ்வும் நன்றாக இருக்கும்.

ஒருவர் குடும்பத்தோடு வசித்து வந்தால் அவர் வீட்டில் தான் உணவை சாப்பிடவேண்டும். வீட்டில் வசதி இல்லை என்றால் அதாவது சமைக்க வழி இல்லை என்றால் அவர் உணவு விடுதியில் சாப்பிடலாம். வீட்டில் வசதி இருந்தும் உணவகத்தில் உணவு அருந்துவது தவறான ஒரு வழி.

உணவகத்தில் வாரத்திற்க்கு ஒரு முறை கூட உணவு சாப்பிடகூடாது. தற்பொழுது எல்லாம் குடும்பத்தோடு வெளியில் சென்று உணவகத்தில் உணவு அருந்துவது ஒரு பேஷனாக மாறிவிட்டது. அப்படி செய்வதும் தவறான ஒரு வழி.

உணவகத்தில் சாப்பிடகூடாது என்று பல பேரும் சொன்னாலும் அதில் உள்ள முக்கிய கருத்தை மட்டும் சொல்லிவிடுகிறேன். பெரும்பாலும் உணவகத்தில் தயாரிக்கும் உணவு உடலில் நச்சுதன்மையை ஏற்படுத்திவிடும். 

உடலில் நச்சுதன்மை ஏற்பட்டுவிட்டால் இருக்கின்ற கிரகங்களுக்கு கொண்டாட்டம் ஆகிவிடும். உங்களை ஆட்டிபடைக்கும் வேலையை அதிகம் செய்ய ஆரம்பித்துவிடும். கிரக பாதிப்பு அதிகம் ஏற்படுவது நமது தவறான உணவு பழக்கத்தால் மட்டுமே அதிகம் ஏற்படுகிறது.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உணவகத்தில் உணவு அருந்தவேண்டும் என்ற நிலை ஏற்படும்பொழுது நமது உணவு முறையை மட்டும் வாங்கி சாப்பிடுவது நல்லது. இட்லி தோசை மற்றும் சாப்பாடு மட்டும் வாங்கி சாப்பிட்டு வாருங்கள்.

நான் தற்பொழுது எல்லாம் வெளியில் அதிகம் செல்லுகிறேன். தங்கும் இடத்தில் மிகவும் கட்டுபாட்டோடு சாப்பிடுகிறேன். அதாவது நமது உணவு முறையை மட்டும் எடுத்துக்கொள்வது வழக்கம். வீட்டிற்க்கு வந்தவுடன் வெளியில் சாப்பிட்ட உணவில் உள்ள நச்சுதன்மையை எடுக்க வீட்டில் அதற்கு என்று சாப்பாடு தயார் செய்து தருவார்கள். அதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு சாதாரண நிலைக்கு வருவது உண்டு.

வீட்டில் தயாராகும் உணவை சாப்பிட்டு வந்தாலே போதும் உங்களுக்கு செல்வவளம் வரும்.

அடுத்த பதிவு மதியம் 3 மணிக்கு மேல்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: