Followers

Friday, June 26, 2015

சனியின் பார்வை


ணக்கம்!
          சனிக்கிரகத்தை கண்டு மக்களுக்கு ஒரு பெரிய பயமே இருக்கின்றது அல்லது பயத்தை உருவாக்கிவிட்டார்கள் என்றும் சொல்லலாம்.

சனிக்கிரகம் பனிரெண்டாவது வீட்டிற்க்கு வந்துவிட்டது ஏழரை ஆரம்பித்துவிட்டது. ராசிக்கு ஏழில் கண்ட சனியாக வந்துவிட்டது. ராசிக்கு எட்டாவது வீட்டில் அஷ்டமசனி என்று ஒவ்வொரு விதத்திலும் ஒவ்வொரு பிரச்சினை என்று சொல்லிவைப்பார்கள். 

சனிக்கிரகத்தின் வருகையைவிட சனிக்கிரகத்தின் பார்வை தான் பெரிய அளவில் பிரச்சினை உருவாக்கிவிடும். ராசிக்கு சனியின் பார்வை விழும்பொழுது அவர்களின் செயல்பாடு அதிகம் பாதிக்கபடும்.

ஒவ்வொருவருக்கும் ஜாதகத்தில் அமையும் சனியின் பார்வை எந்த வீட்டிற்க்கு வருகிறது என்று பார்த்து தெரிந்துக்கொண்டு அந்த காரத்துவம் கெடும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள்.

கோச்சாரப்படி சனியின் பார்வை எந்த வீட்டிற்க்கு வருகிறது என்று பார்த்து தெரிந்துக்கொண்டு அதற்க்கும் பரிகாரம் செய்துக்கொள்வது நல்லது. பரிகாரம் செய்யமுடியவில்லை என்றால் அந்த காரத்துவம் எதனை காட்டுகிறது என்று பார்த்து அந்த காரியங்களை கொஞ்ச காலத்திற்க்கு தவிர்த்துவிடுவது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: