Followers

Friday, June 26, 2015

பயம் வேண்டாம்


ணக்கம்!
         ஒருவர் பணம் தரவில்லை என்று போட்ட பதிவை படித்துவிட்டு பலர் அரண்டுவிட்டனர். பலர் போன் செய்து என்னிடம் பேசினர். அவர்களுக்கு எல்லாம் விளக்கம் கொடுத்துவிட்டேன். அனைவருக்கும் புரியும்படி இந்த பதிவில் விளக்கிவிடுகிறேன்.

நான் இந்த தொழிலுக்கு வந்து பல வருடங்கள் சென்றுவிட்டது. என்னால் ஒருவரும் பாதிப்படைந்தது கிடையாது. நன்மையை மட்டும் தான் அடைந்துள்ளனர்.

நான் செய்கின்ற நபர்களிடம் நேரிடையாக இவ்வளவு தான் பணம் வேண்டும் என்று கேட்டது கிடையாது. ஒவ்வொரு வேலைக்கும் பதிவில் இவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். நம்மிடம் வரும் ஆட்கள் குறைத்துக்கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு சென்று இருக்கிறேன்.

தொழில் என்று வரும்பொழுது அதில் வரும் பணம் அனைத்தும் எனக்கு மேல் உள்ளவர்களுக்கு செல்லவேண்டும் அது விதி. ஒரு காரியம் நடந்து அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபருக்கு மூன்று முறை நான் ஹோமம் செய்துக்கொடுத்து இருக்கிறேன். 

நான் பதிவிட்ட நாளில் எனக்கு மேல் உள்ளவர்கள் இவருக்கு இனிமேல் எதுவும் செய்யகூடாது என்று சொன்னார்கள். அவர்களின் பேச்சை கேட்டு உடனே எனது வேலையை நிறுத்திவிட்டேன். சம்பந்தப்பட்ட வேலையில் பணம் வந்தபிறகு தான் அவர்களோடு பேச வேண்டும் என்பது விதி. அத்தோடு எனது வேலை முடிந்துவிட்டது.

நான் உங்களிடம் சொல்லுவது எல்லாம் என்னால் எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராது. எனது மேலிடத்தில் உள்ளவர்களுக்கு தரவேண்டிய பணம் இருந்தால் அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். அவர்கள் என்ன செய்வார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் செய்த வேலையை திரும்ப எடுப்பது மட்டுமே எனது வேலை.

நான் ஜாதக வழியில் நிறைய வேலையை செய்வது உண்டு. அதனை மட்டும் தற்பொழுது திரும்ப பெறும் வேலையை தொடங்குவேன். மற்றபடி என்னால் எந்த பாதிப்பும் வராது. சம்பந்தப்பட்ட நபர் பணத்தை செலுத்திவிட்டால் உடனே அனைத்தையும் சரி செய்துக்கொடுத்தவிடுவது உண்டு.

தொழிலில் இருந்து வரும் பணத்தை வைத்து தான் பல நல்ல சேவைகள் செய்யப்படுகின்றன. அதில் மட்டும் எச்சரிக்கையோடு இருங்கள். மற்றபடி என்னை கண்டு பயம் கொள்ள தேவையில்லை. உங்களை போல் எனக்கும் எல்லாம் உண்டு. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: