Followers

Thursday, June 11, 2015

நேர்மையான வழி


வணக்கம்!
          என்னுடைய வழி நேர்மையான வழி என்று பல தடவை இந்த பதிவில் சொல்லியுள்ளேன். என்னை சந்திக்கவேண்டும் என்று பல நண்பர்கள் தொந்தரவு செய்து என்னை வந்து சந்திக்கும்பொழுது அவர்கள் கேட்கும் கேள்வி எப்படியாவது எதிர்மறையான செயல்களை செய்ய கற்றுதாருங்கள் என்பது போல் இருக்கும்.

சித்தர்களின் வழி கூட பார்த்தால் நல்ல நிலைக்கு இட்டு செல்லும் வழியாகவே இருக்கும் ஆனால் நம்ம ஆட்கள் அதனை தவறாக பார்த்து அவர்களை பற்றி சொன்னாலே ஏதோ மாந்தீரிகம் செய்யும் ஆட்கள் போலவே காண்பிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜாதககதம்பத்தில் இருந்து வரும் ஆட்கள் எல்லாம் நல்லமுறையில் ஆன்மீகத்தை நாடவேண்டும் என்பதற்க்காக தான் பல நல்ல விசயங்களை எழுதிவருகிறேன். நேர்மையான வழியில் செல்லுவதற்க்கு தயாராக வரும் ஆட்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன்.

ஆன்மீக தாகம் இருப்பவர்களை என்னால் எளிதில் அடையாளம் காணமுடியும் அவர்களுக்கு என்னால் வழிகாட்டமுடியும். நேர்மையான வழியில் நாம் செல்லவேண்டும் என்று முடிவு செய்து ஆன்மீகத்தை நாடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: