Followers

Monday, July 13, 2015

ஆறாவது வீடு அனுபவம்


ணக்கம்!
          கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு பலத்தை கொடுத்து இருப்பார். அவன் அவன் பலம் என்ன பலகீனம் என்ன என்பதை புரிந்துக்கொண்டால் வாழ்வில் வெற்றி பெற்றுவிடலாம்.

சோதிடத்தில் ஆறாவது வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் மிகப்பெரிய பலசாலியாக ஆகிவிடுவார்கள். பல கோடிகளை வைத்திருக்கும் நபர்களின் ஜாதகத்தை எல்லாம் நான் வாங்கி பார்த்து இருக்கிறேன் அவர்களுக்கு ஆறாவது வீட்டில் தீயகிரகங்கள் அமர்ந்து இருக்கும்.

பெரும்பாலும் ஆறாவது வீடு பலமாக இருக்கும் நபர்களுக்கு பணம் அதுவாகவே வந்து சேரும்.சாதாரண மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சின்ன ஒரு சொடுக்கில் இந்த நபர்கள் சம்பாதிப்பார்கள். இவர்களின் கிரகம் அப்படி வேலை செய்கிறது.

ஆறாவது வீடு பலமாக இருக்கும் நபர்களிடம் நாம் சின்ன பிரச்சினையை செய்தால் கூட அவர்களின் கிரகங்கங்கள் நம்மை துரத்தி அடிக்கும். அவர்கள் சின்ன செயலிலேயே நம்மை தோற்கடித்துவிடுவார்கள்.

ஆறாவது வீட்டில் உங்களுக்கு தீயகிரகங்கள் இருந்தால் அது நல்லது என்றே நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள். உங்களால் எதுவும் சாதிக்கமுடியும் என்பதை வாழ்வில் தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: