Followers

Tuesday, July 14, 2015

செல்வவளம்


ணக்கம்!
          காலையிலேயே செல்வவளத்திற்க்கு என்று ஒரு பதிவை பார்த்துவிடலாம். இதனைப்பற்றி ஏற்கனவே சொல்லிருந்தாலும் மீண்டும் நினைவூட்ட இந்த பதிவு.

ஒவ்வொருவரும் நான் சந்திக்கும்பொழுது என்னிடம் சொல்லும் வார்த்தை சார் கடன் அதிகம் இருக்கின்றது அதற்கு ஒரு வழி செய்யுங்கள் என்று சொல்லுவார்கள். கடன் வாங்கியவர்களிடம் நீங்கள் சொல்லும் வார்த்தை கண்டிப்பாக உங்களின் பணத்தை திருப்பிக்கொடுத்துவிடுகிறேன் என்று மட்டும் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள்.

கடன் நமக்கு கொடுத்தவர்கள் இவன் கடனை திருப்பிக்கொடுக்கமாட்டேன்கிறான் என்று கடவுளிடம் வேண்டினால் நாம் என்ன தான் முயற்சி செய்தாலும் நமது முயற்சி அனைத்தும் தோல்வியை நோக்கி சென்றுவிடும்.

பத்து பேர்களிடம் கடன் வாங்கிவிட்டு பத்து பேரும் கடவுளிடம் முறையிட்டால் நம் கதி அதோ கதி தான். பத்து பேரின் நினைப்பும் நம்மை வெப்பன் போல தாக்கிக்கொண்டே இருக்கும். கடன் வாங்கியவர்களிடம் கடன் நான் திருப்பி தந்துவிடுவேன் என்று மட்டும் சொல்லிவிடுங்கள்.

செல்வவளம் என்பதை சொல்லிவிட்டு கடனை பற்றி சொல்லுகின்றார் என நினைக்கவேண்டாம். கடனை அடைத்தால் தானே செல்வம் சேரும் அதனால் சொன்னேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: