Followers

Thursday, July 16, 2015

மனை


ணக்கம்!
          ஒவ்வொருவருக்கும் வீடு அமையவேண்டும் என்று பல்வேறு கருத்துக்களை சொல்லிக்கொண்டு வருகிறேன். அதில் ஒன்றைப்பற்றி சொல்லுகிறேன்.

மனையை தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக முக்கியம். ஒரு மனையை பொறுத்து தான் அதில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையும் அமையும். மனையில் பிரச்சினை என்றால் வீட்டில் நிம்மதி கிடையாது.

ஒரு மனையை நீங்கள் தேர்ந்தெடுக்கும்பொழுது அருகில் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு வாங்குவது நல்லது. ஒரு சில மனை கோவில்களின் இடமாகவும் இருக்கும். ஒரு சில இடத்தில் ஏதாவது ஒரு சாமியாரின் சமாதி அமைந்த இடமாகவும் இருக்கும்.

ஒரு சில மனையில் ஓட்டம் என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒரு தேவதை அந்த மனையின் வழியாக சென்று வருவதை தான் ஓட்டம் என்பார்கள். ஓட்டம் இருக்கும் மனையை வாங்கினாலும் பிரச்சினை தான் இருக்கும்.

நல்ல விசாரித்துவிட்டு அதோடு ஒரு ஆன்மீகவாதியை அழைத்து மனையை பார்ப்பதும் நல்லது.நல்ல ஆலாேசனை செய்துவிட்டு மனையை தேர்ந்தெடுத்து வீடு கட்டிக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: