Followers

Friday, July 17, 2015

அம்மன் அருள்


ணக்கம்!
          ஆடி மாதம் என்றாலே அது அம்மன் மாதமாக தான் கருதவேண்டும். அந்தளவுக்கு ஆடிக்கும் அம்மனுக்கும் தொடர்பு இருக்கிறது. இன்று முழுவதும் அம்மனின் நினைப்பில் சென்றுவிட்டது. உங்களுக்கு பதிவை தருவதிலும் காலம் தாழ்த்திவிட்டேன். இந்த பதிவை கொடுத்துவிட்டு மீண்டும் அம்மன் கோவிலுக்கு செல்லவேண்டும். 

சக்தியை எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் இந்த மாதத்தில் அம்மனை நன்றாக வழிப்பட்டாலே போதும். உங்களின் பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு தினமும் சென்று வழிபட்டுக்கொண்டு வாருங்கள். அதோடு நமது அம்மனையும் மனமுருகி வழிபட்டு வாருங்கள்.

ஒரு அம்மனின் சக்தி மட்டும் உங்களுக்கு கிடைத்தாலே போதும் உங்களின் வாழ்க்கை நிறைவு பெற்ற வாழ்க்கையாகிவிடும். அனுபவத்தில் கண்ட உண்மை இது.

ஒரு சிலர் ஆடி மாத வெள்ளிக்கிழமை அன்று விரதமும் இருப்பார்கள். உங்களால் முடிந்தால் ஆடி வெள்ளிக்கிழமை அன்று முழுமையான விரதம் இருந்து அம்மனை வேண்டிக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: