Followers

Monday, July 20, 2015

மனை


வணக்கம்!
          மனையைப்பற்றி சொல்லி வந்தேன். இப்பதிவில் மேலும் தகவல்களை பார்க்கலாம். ஒரு மனையை நாம் தேர்ந்தெடுக்கும்பொழுது அந்த மனை ஆண்களுக்கு சரிப்பட்டு வருமா என்று பார்த்தும் தேர்ந்தெடுக்கவேண்டும்.

ஒரு சில மனைகளில் ஆண்களை தங்க வைக்காது. ஆண் வாரிசு பிறக்காது. ஆண்கள் இருந்தால் ஆண்கள் இறந்துபோகவும் வாய்ப்பு அதிகம். 

நான் இதனை அனுபவ பூர்வமாக பார்த்திருக்கிறேன். ஒரு மனையில் வீடு கட்டி குடி சென்றார். அந்த மனையை வாங்கிய உரிமையாளர் வெட்டுப்பட்டு இறந்தார். அதன் பிறகு அந்த மனையை பிறர் ஒருவருக்கு விற்றுவிட்டு சென்றுவிட்டார்கள்.

மனையை வாங்கிய நபரின் குடும்பத்தில் உள்ள ஆண் வாரிசு எல்லாம் வியாதியால் இறந்தார்கள். அவரும் அந்த மனையை அப்படி போட்டுவிட்டு சென்றுவிட்டார். 

பல இடத்தில் நீங்களே அனுபவபூர்வமாக இதனை பார்த்து இருக்கலாம். அதனால் நீங்கள் வாங்கும் மனையையாக இருந்தாலும் வீடாக இருந்தால் பல தடவை அதனை சோதனை செய்த பிறகு வாங்குவது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: