Followers

Sunday, July 5, 2015

விழிப்புணர்வு


ணக்கம்!
          எந்த ஒரு கிரக பெயர்ச்சியாக இருந்தாலும் அது நன்மையை தந்தாலும் தீமையை தந்தாலும் நாம் விழிப்போடு இருந்தால் எதுவும் நமக்கு தீமை செய்து விடாது. நாம் விழிப்போடு இல்லாமல் இருக்கும்பொழுது மட்டுமே நாம் சிக்கலில் மாட்டிக்கொள்வோம்.

எந்த ஒரு பாதிப்பை தரும் கிரகமும் நமது மூளையில் ஒரு மந்த நிலையை உருவாக்கி அதன் பிறகு தான் காரியத்தை செய்யும். நமது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள பல பயிற்சிகளை செய்யும்பொழுது கிரகபாதிப்பு வராது. கோச்சாரப்பலன்களை பொறுத்தவரை மனதுக்கு காரகன் என்று சொல்லப்படும் சந்திரனை வைத்து தான் சொல்லப்படுகிறது.

நான் ஆன்மீகத்திற்க்கு வருவதற்க்கு முன்பே எனக்கு கோச்சாரப்பலன்கள் சரியில்லை என்ற காலத்தில் சுறுசுறுப்போடு அதிக வேலைகளை செய்தேன். கோச்சாரப்பலன்கள் காலத்தில் நிறைய வேலைகளை எடுத்து செய்து இருக்கிறேன்.

கோச்சாரப்பலன்கள் நமக்கு சரியில்லை என்று ஒதுங்கிக்கொள்ளாமல் விழிப்புணர்வோடு செயல்பட்டால் கோச்சாரப்பலன்களை பார்த்து நாம் பயம்கொள்ள தேவையில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: