Followers

Wednesday, July 29, 2015

புதிய தொடக்கத்தைப்பற்றி


ணக்கம்!
          ஜாதககதம்பத்தில் நிறைய கருத்துக்களை எழுதியுள்ளேன். அதனை எடுத்து எத்தனை பேர்கள் முன்னேற்றம் அடைந்தனர் என்பது எனக்கு தெரியாது. ஜாதககதம்பத்தில் ஒரு பதிவில் ஒன்றை சொல்லிருந்தேன் அது இருட்டில் அமர்ந்துக்கொண்டு உங்களை பரிசோதனை செய்யும்பொழுது உங்களின் ஆத்மாவை பார்க்கலாம் என்று சொல்லிருந்தேன்.

இதனை எத்தனை பேர் முயன்று பார்த்தார்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் ஒருவர் முயன்று பார்த்து அதனைப்பற்றி எனக்கு சொல்லிருந்தார். இதுப்போல் பல பதிவுகளில் தனிப்பட்ட முறையில் உங்களை ஆன்மீகத்தில் மேம்படுத்திக்கொள்ள வழியை சொல்லிருந்தேன். 

சும்மா படித்துக்கொண்டே இருந்தால் அதில் ஒன்றும் வரப்போவதில்லை முயன்று பார்த்தால் தான் அது என்ன என்று தெரியும்.இப்பொழுது நாம் தொடங்கும் புதிய பதிவுகளில் ஒவ்வொரு பதிவுகளும் ஒரு ஆன்மீகப்பயிற்சியை கண்டிப்பாக எடுப்பது போல் இருக்கும். சும்மா படித்துக்கொண்டு இருக்கமுடியாது. அதனை பயிற்சியாக செய்ய ஆரம்பிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அந்த பதிவு வர இருக்கின்றது.

ஆன்மீகப்பயிற்சி வகுப்பை எடுங்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் அனைவரும் அதில் இணைந்துக்கொள்ளுங்கள். இலவசமாக கொடுத்தால் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும் அந்த காரணத்தால் அதற்கு பணம் என்று சொல்லியுள்ளேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: