Followers

Friday, July 3, 2015

பூஜைப்பொருட்களும் கலப்படம்


ணக்கம்!
          இன்றைய தேதியில் விற்க்கும் அனைத்து பொருட்களிலும் கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள் தான் விற்பனை செய்ப்படுகின்றன. இது பூஜை பொருட்களிலும் கலப்படம் செய்யப்படுவதும் நடைபெறுகிறது.

பூஜை பொருட்கள் சுத்தமாக இருந்தால் தான் நாம் செய்யும் பிராத்தனையை இறைவனுக்கு சேர்க்கமுடியும் என்று சுத்தமான பொருட்களை வாங்கி பூஜை செய்ய சொல்லுவது உண்டு. 

ஒரு ஹோமம் செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு பயன்படுத்தும் ஹோம குச்சி எல்லாம் இயற்கையான குச்சியாக இருக்கவேண்டும் என்பது விதி. கடையில் வாங்கும் ஹோம குச்சி எல்லாம் பார்த்தால் அது ஹோமத்திற்க்கு உள்ள குச்சி போலவே இல்லாமல் இருக்கிறது.எதனையோ வாங்கி வந்து விற்றுக்கொண்டு உள்ளனர்.

ஹோமத்திற்கு சுத்தமான நெய் வாங்கி உபயோகப்படுத்தினால் ஹோமம் செய்யும்பொழுது ஊரு முழுக்க வாசனை தாங்கமுடியாது. இன்று நாம் உபயோகப்படுத்தும் நெய் ஹோமம் செய்யும்பொழுது அந்த   இடத்தில் கூட வாசனை வருவதில்லை.

சுத்தமான பொருட்களை வாங்கி ஒரு சாதாரணமானவர் பூஜை செய்தால் கூட இறைவன் உடனே வருவார். இன்று விற்க்கும் பொருட்களை எல்லாம் வாங்கி ஞானி செய்தால் கூட இறைவன் வரமாட்டார். யாரையும் குறை சொல்ல முடியாது யுகம் கலியுகம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: