Followers

Saturday, July 4, 2015

கோச்சாரப்பலன்


வணக்கம்!
          நேற்று ஒரு நண்பர் ஒரு கேள்வியை கேட்டு அனுப்பிருந்தார். எனக்கு கோச்சார பலன் மட்டும் தான் பலன் நடைபெறுகிறது. எப்படி நீங்கள் ஐந்து சதவீதம் தான் கோச்சாரப்பலன் நடைபெறும் என்று சொல்லுகின்றீர்கள் என்று கேட்டுருந்தார்.

கோச்சாரப்பலன் மட்டும் ஒருவருக்கு நடைபெற்றால் அவரின் ஜாதகத்தில் தசாநாதன் வேலை செய்யவில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும். தசாநாதன் நன்றாக இருந்தால் கோச்சாரப்பலனுக்கு வேலை இல்லாமல் செய்துவிடும்.

பல ஜாதகங்களில் கோச்சாரப்பலன் மட்டும் பலன் தருவதை நானும் பார்த்து இருக்கிறேன். கோச்சாரப்பலன் மட்டுமே ஒருவருக்கு நடைபெற்றால் அவரின் வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக போய்விடும். நான் வேலை செய்யும் தொழில் நண்பர்களுக்கு கூட கோச்சாரப்பலன் மட்டும் ஒரு சிலருக்கு வேலை செய்கிறது. அதனை எல்லாம் கட்டு போட்டு தசாநாதனை வேலை செய்ய வைத்திருக்கிறேன். 

கோச்சாரப்பலன் மட்டும் உங்களுக்கு நடைபெற்றால் தசாநாதனுக்கு நல்ல பரிகாரத்தை செய்யுங்கள். தசாநாதனை நன்றாக வேலை செய்ய வைத்துவிட்டாலே போதும். எனக்கு கோச்சாரப்பலன் ஒரு சதவீதம் கூட வேலை செய்வதில்லை. தசாநாதன் நன்றாக வேலை செய்கிறது. 

சொந்த அனுபவத்தில் கூட என்னுடைய தொழில் நண்பர்களுக்கு கோச்சாரப்பலனை வேலை செய்யாமல் செய்துவிடுவது உண்டு. கோச்சாரப்பலன் வேலை செய்தால் ஒருவரால் ஒரு தொழிலை நடத்தவே முடியாமல் போய்விடும். குடும்பத்திலும் பல பிரச்சினையை கிளப்பிவிட்டுவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: