Followers

Friday, July 3, 2015

கி்ரக பெயர்ச்சி


வணக்கம்!
          தற்பொழுது நமது நண்பர்கள் குரு பெயர்ச்சியை கணக்கில் கொண்டு கேள்விகளை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலும் கோச்சாரத்தில் குரு மோசமாக இருப்பவர்கள் அதிகமாக கேள்வியை கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

கோச்சார பலன் எல்லாம் வேலை செய்ய ஆரம்பித்தால் நாட்டில் வறுமை எல்லாம் இல்லாமல் போய்விடும். ஒவ்வொருவரும் சமமாக வாழ ஆரம்பித்துவிடுவார்கள். பொதுவுடமையாக வாழ ஆரம்பித்துவிடுவார்கள் ஏன் என்றால் கிரகங்கள் ஐம்பது சதவீதம் நல்லதும் ஐம்பது சதவீதம் கெட்டதும் செய்யும்.

ஒவ்வொருவருக்கும் ஐந்து சதவீதம் கோச்சாரப்பலன் நடைபெற்றாலே அதுவே பெரிய விசயமாக தான் இருக்கும் என்பதை சொல்லுகிறேன். எங்களின் தொழில் சோதிடம் என்பதால் இதில் உள்ள விசயத்தை வெளியில் பெரிய அளவில் சொல்லும்பொழுது மட்டுமே வியாபாரம் செய்யமுடியும். அதனால் கோச்சாரப்பலன்கள் எல்லாம் இந்தளவுக்கு பெரியளவில் ஊதப்படுகிறது.

ஐந்து சதவீத பலனையும் கெடுதல் பலன்கள் நடந்தால் அதற்கு தகுந்த பரிகாரம் இருக்கின்றது. அதனை செய்துக்கொண்டு அதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். எனக்கு தெரிந்த நண்பர்களுக்கு அனைவருக்கும் நானே இதற்கு பொறுப்பு ஏற்று செய்துவிடுகிறேன். கவலை வேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: