Followers

Monday, July 6, 2015

அனுபவம்


ணக்கம்!
          பல இடங்களுக்கு நான் சென்று வந்து இருக்கிறேன். இனிமேலும் செல்லுவேன். ஒவ்வொரு ஊரிலும் உள்ள மக்களோடு நான் பழகி இருக்கிறேன். ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு அனுபவத்தை பெற்று இருக்கிறேன்.

ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்பொழுது ஒன்றை காண்பேன். அதனைப்பற்றி தான் இப்பதிவில் சொல்லுகிறேன். பல இடங்களில் ஒருவர் செல்வாக்கு உடையவராக வாழ்ந்தார் என்றால் அவரின் சந்ததிகள் அவருக்கு ஒரு சமாதியை வைத்து அதன் மேல் சிவலிங்கத்தை வைத்து கோவிலாக கட்டி விடுகிறார்கள்.

செத்தவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஊரில் இருக்கின்ற அனைத்து அயோக்கியதனத்தை எல்லாம் செய்துவிட்டு பல குடும்பங்களை கெடுத்துவிட்டு அவர்கள் இறக்கிறார்கள். அவர்களுக்கு அவரது வாரிசுகள் கோவில் கட்டுகிறார்கள். இவர்களை வழிப்பட்டால் எப்படி இருக்கும்.

இன்றைய காலத்தில் கட்டப்படும் கோவில் எல்லாம் தவறான வழியில் சம்பாதித்து கட்டப்படும் கோவிலாகவே இருக்கின்றது. அதற்கு நீங்கள் வீட்டிலேயே உங்களின் பூஜையறையிலேயே அமர்ந்து நன்றாக சாமி கும்பிட்டுவிட்டு செல்லலாம்.

இன்று மதுரை செல்லுகிறேன். மதுரையில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: