Followers

Tuesday, July 7, 2015

செவ்வாய் வருவாய்


வணக்கம்!
          செவ்வாய் வருவாய் என்று சொல்லுவார்கள். செவ்வாய்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடமும் வைத்தாலும் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றிக்கொடுக்கும்.

செவ்வாய் கிழமைக்கு என்று ஒரு வேகம் உண்டு. வாரத்தில் எந்த கிழமையும் செவ்வாய்கிழமை போல் வேகமாக இருக்காது. எந்த ஒரு பரிகாரத்தையும் செய்து நமக்கு எதுவும் நடைபெறவில்லை என்றால் செவ்வாய்கிழமை அன்று பரிகாரம் செய்தால் அதற்கு பலன் கிடைக்கும்.

ஒவ்வொருவருக்கும் நான் சொல்லுவது செவ்வாய்கிழமை அன்று விரதம் இருந்து வாருங்கள் நல்லது நடக்கும் என்று சொல்லுவேன். செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும்.

வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: